Monday, January 11, 2010

அமிலப் பெண்கள்
(இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )
போரிலும் பகையிலும் முதல் பொருளாய்அவளையே சூறையாடினாய்:அவளுக்கே துயரிழைத்தாய் ;உன்னால் அனாதைகளாக்கப் பட்டகுழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:தலைவனாகவும் தேவனாகவும் நீதலை நிமிர்ந்து நடந்தாய்
(கவிஞர் ஃபஹீமாஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' தொகுப்பிலிருந்து)
பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை, கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும், விரிவாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும், பகைகளிலும், பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ என்னவோ, எதிரிகள் அவளையே சிதைக்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். காவலற்றுப் போன அகிம்சை விலங்கென, வேட்டையாடுகிறார்கள். எல்லாம் செய்யும் ஆண், தப்பித்துவிடுகிறான். சிலவேளை சிறிய தண்டனை அல்லது பொது மன்னிப்பு. பெண், காலங்காலமாக தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை ரணம் சுமக்க வேண்டியவளாகிறாள்.
இனி, படங்களைப் பார்ப்போம். இப் படங்கள் உங்களை அதிரச் செய்யும். இப்படியுமா கொடூரங்களென வியக்கவும் செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்காக மனமுருகவும் செய்யும். அவர்களின் துயருணர்ந்து, இது போல எவருக்குமே நிகழக் கூடாதெனப் பிரார்த்தியுங்கள். நீங்கள் அறிந்தவர்கள் எவரேனும் இவ்வாறான கொடூரங்களை நிகழ்த்த முற்பட்டால், தடுங்கள். பாதிக்கப்படப் போவது ஒரு உயிர். ஒரு முழு மனித வாழ்க்கை.
இப் படங்களில் இருப்பவர்கள், வன்னமில (Acid) வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள். இச் சாகசத்தைச் செய்தவர்கள் ஆண்கள். பாகிஸ்தான் நாட்டில் இவை பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் யுக்தி அல்லது பழிக்குப் பழி.
# இரம் சயீத் (வயது 30) - 12 வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால், நடு வீதியில் வைத்து, அமில வீச்சுக்கு உள்ளாகி முகம், தோள், பின்புறமென முழுவதுமாகப் பாதிக்கப்பட்டார். இவரைக் காப்பாற்ற, இருபத்தைந்து ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

# ஷமீம் அக்தர் (வயது 18) - இவரது 15 வயதில், மூவர் இவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அமிலத்தை இவர் மீது எறிந்து தப்பித்தனர். இதுவரையில் பத்து ப்ளாஸ்டிக் சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
# நஜாஃப் சுல்தானா (வயது 16) - பெண் குழந்தை வேண்டாமென்று கருதிய இவரது தந்தை, இவரது ஐந்து வயதில் இவரை எரித்துவிட்டார். இதன் காரணமாக முழுமையாகப் பார்வையிழந்த இவரை பெற்றோரும் கைவிட்டு விட, தற்பொழுது உறவினர்களிடம் தஞ்சமடைந்துள்ளார். பதினைந்து தடவைக்கும் மேலாக சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

# ஷெஹ்னாஸ் உஸ்மான் (வயது 36) - ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சினையொன்றின் போது, இவரது உறவினரால் அமில வீச்சுக்குள்ளானார். நிவாரணம் பெறவேண்டி இதுவரை பத்து சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.

# ஷானாஸ் பீபி (வயது 35) - பத்து வருடங்களுக்கு முன்னர் குடும்பப் பிரச்சினையொன்றின் போது உறவினரொருவரால் அமில வீச்சுக்குள்ளான இவர் எந்தவொரு சிகிச்சைகளுக்கும் இன்றுவரை உட்படுத்தப்படவில்லை.

# கன்வால் கையூம் (வயது 26) - ஒரு வருடத்திற்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இவருக்கு இதுவரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை

# முனீரா ஆசிப் (வயது 23) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.


# புஷ்ரா ஷாரி (வயது 39) - தனக்குப் பிடிக்காத கணவரை விவாகரத்துச் செய்ய முற்பட்டபோது, அவரால் அமில வீச்சுக்காளான இவர், இதுவரை இருபத்தைந்து சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ளார்.

# மைமூனா கான் (வயது 21) - குடும்பத் தகராறொன்றின் போது ஒரு இளைஞர் குழுவினால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை இருபத்தியொரு சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.

# ஸைனப் பீபி (வயது 17) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை பல சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.


# நைலா ஃபர்ஹத் (வயது 19) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.

# ஸாய்ரா லியாகத் (வயது 26) - பதினைந்து வயதில் திருமணமான இவர், படிப்பைத் தொடர வேண்டுமென விரும்பியதால் தனது கணவராலேயே அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஒன்பது முறை சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ள இவர், கையில் வைத்திருப்பது பழைய புகைப்படம்.
இது போலவும், இன்னும் பல விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்களும் பாகிஸ்தானில் மட்டுமல்ல. எல்லா தேசங்களிலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
போகப் பொருளாகவும், விளம்பரங்களுக்கும், அங்கங்களை வர்ணிக்கவும் பயன்படும் பெண்கள் மட்டுமல்ல. இவ்வாறாக பாதிப்புற்ற பெண்களும் நம் மத்தியில் உலவிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை


































Friday, January 8, 2010

த மு மு க. மாநில துனைசெயலாளர் கோவை சையது அவர்களின் தாயார் மரணம்இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹி ராஜி ஊன்

கோவை சையது அவர்களின் தாயார் மரியம் பீவி வயது 71 அம்மையார் அவர்கள் (8-01-2010) வெள்ளிகிழமை மதியம் 12 மணியளவில் மருத்துவமனையில் வபத்தனர்.பிறகு கரும்பு கடை பகுதியில் உள்ள அவரது விட்டியில் சமுதாயத்தனர் பார்வைக்கு வைக்கப்பட்டது. மரண செய்தியை அறிந்த த மு மு க மாநில தலைவர். போரா ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சென்னையில் இருந்து இரவு 8-30 மணி விமான முலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில்இருந்து நேராக கோவை சையது இல்லத்தில் வந்து அவராது தாயார்யின் மையத்தை பார்த்து துஆ செய்துவிட்டு கோவை சையதுக்கும் அவராது குடும்பதார்க்கும் ஆறுதல் கூறியனார்.
அது போல் த மு மு க கோவை மாநகர செயலாளர் பாபு அவாகளின் தந்தை ஜியாவுதின் வயது 65 அவாகள் மாலை மரணம் அடைந்தார்கள். அவராது இல்லத்திற்கும் சென்று மையத்தை பார்த்து விட்டு பாபுவின் குடும்பத்திற்க்கும் ஆறுதல் கூறினார் துஆ செய்தார்.
அது போல் த மு மு க முன்னாள் வர்த்தக அணி செயலாளர் கலில் அவர்களின் தாயார் பல்கீஸ் அம்மையார் உடல் நலம் சரியில்லாமல் அவராது இல்லத்தில் இருக்கிறர் அவரையும் சென்று உடல்நலம் விசாரித்தார்.பிறகு கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து சற்று ஒய்வு எடுத்துவிட்டு, த மு மு க, மமக, மாவட்ட நிர்வாகிகளுடன் வருகிற பிப்-7 ம் தேதி திருப்பூரில் நடக்க இருக்கும் மமக வின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி பற்றி விபரங்கனை கேட்டு அறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் த மு மு க மாநில செயலாளர் கோவை உமர், த மு மு க மாநில பேச்சளாளர் கோவை ஜாகீர், த மு மு க மாநில துனைசெயளாளர் சாதிக், தமுமுக மாவட்ட தலைவர் பஷிர். மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட துனை செயலளளர் ஷாஜகான். மாவட்ட பெருளாளர் அப்பாஸ். மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் அப்பாஸ், அபு,பாபு,ஜபார். காஜா, கவிஞர் ஹக் ஆகியோர் உடன்யிருந்தர்கள்.
பிறகு இரவு 10-30 மணிக்கு பஸ் முலம் நெல்லையில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.



செய்தி புகைப்படம் : கோவை தங்கப்பா







Wednesday, January 6, 2010

மனித நேய மக்கள் கட்சி சார்பாக திமுக கவுன்சிலர்யை கண்டித்து ஆர்பாட்டம் கோவையில்

கோவை புறநகர் பகுதியான குறிச்சி, நகராட்சி துனைத்தலைவரும், 1-வது வார்டு ஆத்துபாலம் பகுதி கவுன்சிலருமான இ.எம். அனிபாவை கண்டித்து 1-வது வார்டு பொதுமக்களும், மனித நேய மக்கள் கட்சியும் இனைந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது, 1-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் காலனியில் பாட்ட ஏற்பாடு செய்ய கோரி பலமுறை கூறியும் அதில் அசட்டையாக இருந்து. ஆத்துபாலம் பகுதியில் சாக்கடை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யாமை சாக்கடை சுத்தம் செய்யாதால் கடந்த 25-11-05 அன்று அசாருதீன் என்ற சிறுவன் டெங்கு காய்ச்சால் இறந்தது கூறியும் அசட்டையாக இருந்தது. 1-வது வார்டில் குப்ழபத்தொட்டி வைக்காமல் அதை 2-வது வார்டில் உள்ள மண்டபங்கள் முன்பு வைத்தது. டி.எ.ஹச்.காலனியில் பொது சுகாதாரக் கழிப்பிடம் 3 வருடமாகக் கேட்டும் ஏற்பாடு செய்யாதது, தெரு விளக்குகள் முறையாக அமைக்காமல் இருப்பது. குடிநீர் விநியோகம் சரிவர முறைப்படுத்தால் வார்டு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் 1-வது வார்டு, 2-வது வார்டு பகுதிகளில் ராஜ வாய்க்கால் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் திடீரென காலி செய்ய வேண்டும் என அச்சுறுத்துவதை நகராட்சி கண்டு கொள்வதில்லை.
மேலும் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகபபடுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைளையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் நகர மக்களுக்கு வழங்க வேண்டும். என தழிழக அரசுயின் கவணத்திற்காக இந்த ஆர்பாட்டம் நடத்தபாட்டது.
இந்த ஆர்பாட்டதிற்க்கு அந்த பகுதி பொதுமக்கள் பெண்கள் மற்றும் தமுமுக, மனித நேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டார்கள். இதில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர் தலைமையில். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துனை செயலாளர் ஷாஜகான். தமுமுக மாவட்ட செயலாளர் ரபிக். இளைஞர் மாவட்ட செயலளாளர் அப்பாஸ். மற்றும் ஜபார். பாபு. அஜிஸ். ஹக்கிம். 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்
செய்தி,புகைப்படம் : கோவை தங்கப்பா





































Wednesday, December 30, 2009

மனித நேய மக்கள் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா பிரச்சராம்....

மனித நேய மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் கோரிக்கை மாநாடு ( சமூக நீதி, விலைவாசி குறைப்பு, பூரண மது ஒழிப்பு ) வரும் பிப்ரவரி 7ம் திருப்பூரில் நடக்கவுள்ளது. அதற்காக கோவையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது. மாநில துனை ஊபொதுச் செயலாளர் தமீம் அன்சாரி. த மு மு க மாநில துனைபொதுச் செயலாளர் ரிபாய். மாநில செயலாளர். கோவை உமர். மாநில துனை செயலாளர் கோவை சாதிக். மாநில பேச்சாளர் ஜாகீர். தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்.மாவட்ட செயலாளர் ரபிக்.மாவட்ட பொருளாளர் அகமது கபீர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள். ஆகியோர்கள் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள், செயல் வீரர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்றபாடுகளை மாவட்ட துனை செயலாளர் ஷாஜகான். மாவட்ட பொருளாளர். அப்பாஸ். மாவட்ட இளைஞர் அணி அப்பாஸ். ஜபார். கவிஞர் ஹக். பரகாத்துல்லா. காஜா உசேன். நுர் முஹம்மது. ஆகியோர் செய்து வந்தார்கள். இறுதியில் சிறுபான்மை சமூக புரட்சி கட்சியின் மாவட்ட தலைவர் யூசுப் அவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி மனித நேய மக்கள் கட்சியில் இனைதார். முடிவுவில் மாநகர செயலாளர் ரபிக் நன்றி கூறினார்.
புகைப்பட தொகுப்பு

செய்தி புகைப்படம் : கோவை தங்கப்பா




































































































































































































































































































































Thursday, December 17, 2009

The Muuti Media Soft டேச்நோலோகீஸ்

ஒர் இனிய அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர்களுக்கு
நம்முடைய முஸ்லிம் உம்மத் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது யாவரும் அறிந்ததே. சச்சார் கமிட்டி இதனை அறிக்கையாக ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது. கல்வியை எங்கு கிடைத்தாலும் பெற்றுப் பயனுற்ற உலகிற்கே முன்னோடிகளாய் திகழ வேண்டிய சமூகம் இன்றோ நாதியற்றுச் சீர்குழைந்து நிர்க்கதியாய் தெருவேரங்களில் முடங்கிக் கிடக்கின்றது. வாழ்க்கைக்குப் பணம் சம்பாதித்தால் போதும் எனனும் மனப்பான்மையினால் வணிகம் வியாபாரத்தை மட்டும்மே இலக்காகக் கொண்டு காசு பணத்தை மட்டும்மே தேடியலையும் சமூகமாய் நாமின்று மாறிவிட்டோம். இந்நிலையை மாற்றியே ஆகவேண்டும், அதுவும் விரைவாய் வெகு விரைவாய். அதற்கான ஒரு சிறு முயற்சிதான் தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி இது ஒரு சமுதாய நிறுவனம்.

இன்றைய வேகஉலகில் தவிர்க்வே முடியாத ஓர் அம்சமாய் திகழுவது கணிணி என்பதை செய்தித்தாள் வாசிக்கத் தெரிந்தவர்கள் கூட மிகச்சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். அக்கணிணித் துறையில் நம்மவர்களை வல்லவர்களாகவும் சிறிகடித்து பறப்பவரளாகவும் உருவாக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி கம்ப்யூட்டர் என்பது ஏதோ கண்க்கு போடும் கருவியோ மொபைல் ஃபோன்களுக்கு டவுன்லோாடு செய்யும் மெஷினோ கடைக்கு வைக்கும் பேனர்களை உருவாக்கும் இயந்திரமோ அல்ல. கண்டிப்பாக இல்லை. மாறாக, உலகத்தில் வெற்றிவாய்ப்புகளை குவிக்க நினைப்பவர்களுக்கு வாசலை அகலமாகத் திறந்து வைக்கும் வெற்றிச்சாவி.
கம்ப்யூட்டர் பயில வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் செலவளிக்கவேண்டும். நிறையப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அதைப் பற்றி யோசிக்கவே நாம் பயப்படுகிறோம். தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் துறையில் முன்னிணியில் திகழுகின்ற நிறுவனங்களில் நுழைந்து பார்த்தால், நுழைவது என்ன அவற்றின் விளம்பரங்களைக் கண்ணுற்றாலே நமக்கு கண்டிப்பாக நமக்கு கம்ப்யூட்டர் பயிலவேண்டும் என்னும் எண்ணமே வராது.
ஏராளமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் வணிகநோக்கம் இல்லாமல் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு இந் நிறுவனம் துவக்கப் பெற்றுள்ளது. முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் மாணவர்கள், மாணவியர்கள் என அனைத்து தரப்பாரும் பயனுறும் வகையில் பல்வேறு துறைக்கல்வியை இந்நிறுனம் வழங்க உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமூகத்திற்கு வழிகாட்டுகின்ற உலமாக்களைப் பற்றி யாருமே கவலை கொள்ளுவதாகத் தெரியவில்லை. பள்ளியில் நின்று தொழுவைப்பது மட்டும் அவர்களுடைய பணியாக இருக்காலாகாது. மாறாக சமூக அரங்கிலும் முன்னிணியில் நின்று அவர்கள் பணியாற்றியாக வேண்டும், அதற்கான பல்திறன் தகுதிகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவற்றுள் மிக முக்கியமானது கணிணிப் பயிற்சி. கணிணிப் பயிற்சியின் மூலம் அவாகள் உலகத்தை மட்டும் அறிந்து கொள்ளப் போவதில்லை. அத்தோடு அரபி மொழியையும் வளர்த்துக்கொள்ள முடியும் ஆயிரக் கணக்கான அரபி நூற்களை அணுகி வெகு எளிதாக ஆய்வுக்கண் கொண்டு அறிவமுதம் பருகமுடியும்.
சமூகத்தின் பெருந்தகைகளான தங்களிடம் கோரிக்கையொன்றை ஈங்கு நாங்கள் முன்வைக்கிறோம். சமூகநலன் கருதி துவங்கப்பட உள்ள இப்பணிக்கு தங்களுடைய ஆதரவையும் ஆலோசனையையும் உறுதுனணயையும் உதவிகளையும் ஒத்தாசசைகளையும் எதிர்நோக்குகிறோம்.
சிற்பான முறையில் இற்றிறுவனத்தை இயக்க துனைபுரியும் வகையில் 15 கணிணிப்பொறிகளை வாங்கியாக வேண்டியுள்ளது. எனவே, தங்களால் இயன்ற அளவு ஒன்று, இரண்டு, நான்கு, என கணிப்பொறிகளை வாங்கியளிக்குமாறும் முஸ்லிம் உம்மத்தினரை முன்னேற்றம் முயற்சியில் இயன்ற உதவி ஒத்தாசைகளை வழங்குமாறும் இந்த பணி இறைவனின் நற்கூலி பெறுவாதுதான் எங்கள் நோக்கம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
இஸ்லாமிய சகோதரன்
முஹம்மது ஸஃபையர்என்னும்கோவை தங்கப்பா94436 54473