Friday, July 2, 2010

கோவையில் மமக நூதன போராட்டம்....

கோவையில்  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,  மண்ணெண்ணெய்
விலையேற்றத்தைக் கண்டித்து
மனித நேய மக்கள் கட்சி  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது....


கோவை 2,
மத்திய அரசு இந்த விலை உயர்வு திரும்ப பெறுவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கை வலியுறுத்தி கோவை மாவட்ட  மனித நேய மக்கள் கட்சியின்  சார்பாக, கோவையில் செஞ்சிலுவை சங்கம்  முன்பு, 2ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடந்தது.

இதில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துனை செயலாளர்  எம்.ஹெச்.அப்பாஸ் தலைமையிலும் தமுமுக  மாநில துனை செயலாளர் கோவை சாதிக் அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக, மாவட்ட செயலாளர்  சுல்தான் அமீர், மமக மாவட்ட துனைசெயலாளர் கே. ஷாஜகான், மமக மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ், அதுபோல் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர், தமுமுக மாவட்ட பொருளாளர் அகமது கபீர், மற்றம் தமுமுக, மமக, மாவட்ட, நகரம், கிளை நிர்வாகிகள  உட்பட 300க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் மமக நகர தலைவர் ரபிக் நன்றி கூறினார்.














செய்தி,புகைப்படம்: கோவை தங்கப்பா