Thursday, September 17, 2009

சவூதியில் 25 வயது இளைஞர் துக்கு போட்டு தற்கொலை !!!




ரியாத்: கடந்த ஆறு வாரங்களுக்கு முன் சவூதி தலைநகர் ரியாத்துக்கு எலக்டிரிசியன் வேலைக்கு வந்த இளைஞர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் காதிரி கிராமத்தை சேர்ந்த ஷேக் யூசுப் பாஷா என்ற 25 வயதுடைய இளைஞர் ரியாத்தில் உள்ள ஒரு தனியார் எலக்டிரிகல் நிறுவனத்திற்கு பணிக்காக வந்தார். அவர் தனது மாமாவான எஸ்.கே. முஸாப்பருடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் முஸாப்பர் காலையில் வேலைக்காக புறப்பட்டு சென்றபோது பாஷா அயர்ந்து தூங்கிகொண்டிருந்ததாகவும் பிறகு 3 மணிக்கு வேலை முடிந்து திரும்பி வந்து பார்க்கும்போது அவரது உடல் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததாகவும் கூறினார். மேலும் பாஷாவிற்கு எந்த பணப்பிரச்சனைகளோ அல்லது கடன் தொல்லையோ இல்லை என்றும் சவூதி வருவதற்கு கூட அவர் ஒரு ரியால் கூட செலவழிக்கவில்லை என்றும் அவ்ருக்கு விசா கூட இலவசமாகவே கிடைத்தது என்றார்.இந்தியாவில் இருக்கும் அவருடைய பெற்றோர் அவருடைய உடலை பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி இந்திய தூதரகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர் தனது மகன் சவூதிக்கு செல்லும்போது பூரண உடல்நலத்துடனே சென்றதாக கூறினார்கள்.