Sunday, December 28, 2008

த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை மாவட்ட த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை சிறையிலுள்ள குண்டு வெடிப்பு கைதிகள் பாதிக்கப்படுவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் விடுதலைச்செய்ய கோரி கடிதம். மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
கோவை மத்திய சிறையில் 11 வருடங்களாக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சிறைவாசிகளை, மற்ற ஆயுள் தண்டனை சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்வது போல் வருகின்ற குடியரசு தினத்தன்று முஸ்லிம் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் தங்களது நியாயமான கோரிக்கைகளை சிறை நிர்வாகத்திடம் கோருகின்ற போது, 11 வருடங்களாக சிறை வாழ்க்கையினால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இக்கைதிகள் உடல்நலம் குன்றி நோய்வாய்பட்;டு இருக்கும் வேளையில் சிறைத் துறை அதனை அறிந்து இக்கைதிகளுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் மிகவும் பாதிப்படைகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும் கைதிகள் தங்களுக்குண்டான உரிமைகளை கேட்கும் நேரத்தில,; அதுவும் பல வழிகளில் மறுக்கப்படுகின்றது. இக்கைதிகள் பரோலில் வரும் போது அளவுக்கு அதிகமான காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டினால் இவர்கள் குடும்பத்தார் மத்தியிலும் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்படுகின்ற வகையில் இச்செயல் அமைந்து விடுகின்றது.
எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நியாயம் கிடைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவர்களின் வழக்கை விசாரித்து இவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த தனி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள,; அவரின் தீர்ப்பில் 'மனித சமூகத்தில் வாழும் உதாரணமாக இவர்கள் இருப்பார்கள்' என நீதிபதி தன் தீர்ப்பில் கூறியதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஆகையால், ஐயா அவர்கள், இவைகளை கருத்தில் கொண்டு முஸ்லிம் சிறைவாசிகளின் விஷயத்தில் ஆவண செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தி : கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்

Saturday, December 27, 2008

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்
கோவை டிசம்பர்- 27
சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு கூட நேர்காணலில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அவரின் மனைவி ஆரிபா மற்றும் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகிகள் இன்று (26.12.2008) கோவை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இவ்விஷயத்தில் சமநீதி கிடைத்திட வழிவகை செய்ய ஆவண செய்யுமாறு மனு அளித்துள்ளனர். சம நீதி கிடைக்குமா?
தமிழக முதல்வர்க்கு சிறைவாசியின் மனைவி கடிதம்
ஆரிபா ஆல் அமீன் காலனி3-வது வீதி, தெற்கு உக்கடம் கோவை
– 641001
பெறுநர்
திரு. தமிழக முதலமைச்சர் அவர்கள்
கோட்டைசென்னை
ஐயா,
என்னுடைய கணவர் ஷம்சுதீன். கடந்த பதினொரு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். நானும் கடந்த பதினொரு ஆண்டுகளாக என்னுடைய கணவரை நேர்காணலில் சென்று சந்தித்துக் கொண்டுள்ளேன். ஆனால், இன்று 26.12.2008 அன்று மத்திய சிறைக்கு நேர் காணலுக்கு சென்ற பொது அங்கிருந்த சிறை அதிகாரிகள் என்னுடைய கணவர் ஷம்சுதீன் நான்கு நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். தற்போது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை நேர்க்காணல் காண முடியாது என்று கூறிவிட்;டார்கள்.
ஐயா, என்னுடைய கணவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்ற எந்த விபரமும் கூறவில்லை. ஆதனால் ஐயா, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் என்னுடைய கணவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆரிபா
கணவர் பெயர் சம்சுதீன்
கோவை
செய்தி: கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்

Saturday, December 20, 2008


மனித நீதிப் பாசறை சார்பில் தமிழகத்தில் உள்ள 5மாவட்டகளில் தமிழக சிறைகளில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையிலும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் சமநீதி வேண்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டம். நடந்தது இந்த ஆர்ப்பாட்டதிற்க்கு. மாநில நிர்வாகிகள் தலைமையில் நடந்தது .
இதில் கலந்துகொண்ட நிர்வாகி விபரம்.சென்னையில்.சையது இபுராஹிம் தலைமையில் மாநில பேச்சாளாளர் உசேன் அவாகள் சிறைப்புரை நிகழ்த்தினர் இதில் 500க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்ட்டார்கள். அதோ போல். நெல்லையில் அன்வர் தலைமையில் நெல்லைமாவட்ட செயலாலாளர் மெலளவி மகபுப் அன்சாரி பைஜி சிறப்புரை நிகழ்தினர் இதில் 350க்கும் மேற்பட்றோர்கள் கலந்மு கொண்டடர்கள். மதுரையில். மதுரைமாவட்ட செயலாளர் நசுருத்தின் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜலில் சிறப்புரை நிகழ்த்தினர்.இதில் 600க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டடார்கள். திருச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலாவுதின் தலைமையில் மாநில பேச்சாளாளர் சையது இபுராஹிம் சிறப்புரை நிகழ்த்தினர்.500க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டடர்கள்.
கடந்த செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக
சிறைகளில் 8 ஆண்டுகள் நிறைவடைந்த 1405 தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இதில் மத வழக்குகள் சம்பந்தப்பட்ட ஒரு முஸ்லிம் சிறைவாசி கூட விடுதலை செய்யப்படவில்லை. அதே போல் 2007ம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்ட 118 சிறைவாசிகளில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது.
பேண் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததை கருணை அடிப்படையில் என்று கூறிய தமிழக அரசுக்கு முஸ்லிம் சிறைவாசிகளின் மீது மட்டும் ஏன் கருணை ஏற்படவில்லை?
எனவே, சிறுபான்மையோரின் நலன் காக்கும் அரசாக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் அரசு எந்த பாரபட்சமும் காட்டாமல் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக சிறப்பு ரெமிசன்களை ஏற்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 19.12.2008 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் செஞ்சிலுவை சங்கம் முன்பாக கோவை மாவட்டத் தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் ஏ. பக்ருதீன் அவர்களின் சிறப்புரையுடன் கருணை அடிப்படையிலும், முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் சமநீதி வேண்டியும் கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உம்மர்ஷா மற்றும் கோவை தங்கப்பா, ஆகியோரும் மற்றும், சிறைவாசி குடும்ப பெண்கள் உட்பட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தீர்மானங்களாவன
1. பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பிறந்த தினத்தில் வரும் போது 2009 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் போது பாரபட்சமின்றி முஸ்லிம் சமூக வழக்கிலுள்ள ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.2. பதிமூன்று வருட தண்டனை பெற்ற முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு இவ்வாண்டு மற்றும் வருமாண்டு தண்டனை குறைப்புகளை உடனே வழங்கி அவர்களின் முன் கூட்டிய விடுதலைக்கு அரசு வழிவகை செய்தல் வேண்டும். 3. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கும், சிறைத்துறைக்கும், பரிந்துரைக்கும் காவல் துறையினர் அவர்களின் தற்போதைய மனநிலையை கருத்திற் கொண்டு அதற்கு இசைவான அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். 4. பரோல் (விடுப்பு) போன்றவற்றில் மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கும் வருடத்திற்கு 15 நாள் விடுப்பை முஸ்லிம் சிறைவாசிக்கும் பாரபட்சமின்றி வழி காவலின்றி வழங்க வேண்டும்.5. சிறைத் தண்டனை கழிந்து வெளிவருபவர்களின் மறுவாழ்விற்கு அரசு, உரிய நடவடிக்கைகள் எடுத்து அவர்களுக்கு கடனுதவி போன்றவற்றை வழங்குதல் வேண்டும். 6. சிறையில், முன் கூட்டியே விடுதலைக்கு மறுத்து மன இறுக்கத்தால் மரணமடைந்த திரு. சபூர் ரஹ்மான் போன்றோரின் நிலை மற்ற முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நேரா வ்ணம் விரைந்து அவர்களை விடுதலை செய்ய அரசு ஆவண செய்தல் வேண்டும்
புகைப்பட காட்சிகள்

தனது தந்தைக்காக பச்சிளம் குழைந்தை கேஷம்யிடம் காட்சி

மாநில செயலாளர் பக்ருதீன் சிறப்புரை
மாவட்டத் தலைவர் இஸ்மாயில் தலைமை உரை








செய்திகள். புகைப்படம்: கோவை தங்கப்பா
மிடியா வாய்ஸ்