Friday, January 2, 2009






மனிதநீதிப்பாசறை சார்பில் இஸ்ரேலின் அடாவடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை-1
இஸ்ரேலில்27.12.2008 சனிக்கிழமை முதல் யூத ராணுவம் ‡பலஸ்தீ குடிமக்களின் மீது விமானத் தாக்குதல் ஏவுகணையாலும், நூற்றுக்கணக்கான டாங்கிகளாலும், வெறித்தனமான தாக்குதல் தொடுத்து வருகின்றது. இதில் 315 ‡பலஸ்தீன அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1500 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஜபலியா அகதிகள் முகாமிலும் பள்ளி வாசல்களிலும் குண்டு வீசி கொடூர தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 7 பெண்குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, ‡பலஸ்தீன் மீது இஸ்ரேலின் தொடரும் தாக்குதலைக் கண்டித்து பாப்புலர் ‡ப்ரண்ட ஆ‡ப் இந்தியா சார்பாக 31.12.2008 அன்று மாலை 4.45 மணிக்கு செஞ்சிலுவை சங்கம் முன்புறம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் M N Pமாவட்ட செயலாளர் ஆ.லு. அப்பாஸ் தலைமை தாங்கினார். M N P மாவட்ட தலைவர் AS. இஸ்மாயில் கண்டன உரை நிகழ்த்தினார். இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும், ‡பலஸ்தீனில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தின் தீர்மானங்கள்
1. ‡பலஸ்தீன பூர்வீக அரபு முஸ்லிம்களின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் இராணுவ தாக்குதல் மற்றும் முற்றுகைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. இஸ்ரேலியர்களால் அநீதியாக ஆக்கிரமிக்கப்பட்ட ‡பலஸ்தீர்களின் நிலங்கள் உடனடியாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முக்கத்தஸ்) பள்ளிவாயில் முஸ்லிம்களின் சொந்தமான முதல் கிப்லாவாகும். ஆதனை இஸ்ரேல் முஸ்லிம்களிடம் திரும்ப ஒப்படைகக் வேண்டும்.
4. ‡பலஸ்தீன மக்களால் தங்களின் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தினரை சர்வதேசம் உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
5. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி நமக்கு அளித்த ஜியோனிச எதிர்ப்பு கொள்கையை கைகொண்டு இஸ்ரேலுடனான ராஜ்ய உறவுகளை இந்தியா உடனனடியாக முறித்துக் கொள்ள வேண்டும்.
6. ‡பலஸ்தீன அகதிகள் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக அவர்களின் தாய் பூமியில் மீண்டும் குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.
7. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்து ஐ. நா. சபை சர்வதேச உலகிலிருந்து அதனை தனிமைப்படுத்திட வேண்டும்.
செய்திகள் படம்:கோவை தங்கப்பா