Sunday, December 28, 2008

த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை மாவட்ட த மு மு க. சார்பில் தமிழக முதல்வர்க்கு கடிதம்

கோவை சிறையிலுள்ள குண்டு வெடிப்பு கைதிகள் பாதிக்கப்படுவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் விடுதலைச்செய்ய கோரி கடிதம். மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
கோவை மத்திய சிறையில் 11 வருடங்களாக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சிறைவாசிகளை, மற்ற ஆயுள் தண்டனை சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்வது போல் வருகின்ற குடியரசு தினத்தன்று முஸ்லிம் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் தங்களது நியாயமான கோரிக்கைகளை சிறை நிர்வாகத்திடம் கோருகின்ற போது, 11 வருடங்களாக சிறை வாழ்க்கையினால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இக்கைதிகள் உடல்நலம் குன்றி நோய்வாய்பட்;டு இருக்கும் வேளையில் சிறைத் துறை அதனை அறிந்து இக்கைதிகளுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் மிகவும் பாதிப்படைகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும் கைதிகள் தங்களுக்குண்டான உரிமைகளை கேட்கும் நேரத்தில,; அதுவும் பல வழிகளில் மறுக்கப்படுகின்றது. இக்கைதிகள் பரோலில் வரும் போது அளவுக்கு அதிகமான காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டினால் இவர்கள் குடும்பத்தார் மத்தியிலும் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்படுகின்ற வகையில் இச்செயல் அமைந்து விடுகின்றது.
எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நியாயம் கிடைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவர்களின் வழக்கை விசாரித்து இவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த தனி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள,; அவரின் தீர்ப்பில் 'மனித சமூகத்தில் வாழும் உதாரணமாக இவர்கள் இருப்பார்கள்' என நீதிபதி தன் தீர்ப்பில் கூறியதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஆகையால், ஐயா அவர்கள், இவைகளை கருத்தில் கொண்டு முஸ்லிம் சிறைவாசிகளின் விஷயத்தில் ஆவண செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தி : கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்

Saturday, December 27, 2008

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்
கோவை டிசம்பர்- 27
சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு கூட நேர்காணலில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அவரின் மனைவி ஆரிபா மற்றும் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகிகள் இன்று (26.12.2008) கோவை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இவ்விஷயத்தில் சமநீதி கிடைத்திட வழிவகை செய்ய ஆவண செய்யுமாறு மனு அளித்துள்ளனர். சம நீதி கிடைக்குமா?
தமிழக முதல்வர்க்கு சிறைவாசியின் மனைவி கடிதம்
ஆரிபா ஆல் அமீன் காலனி3-வது வீதி, தெற்கு உக்கடம் கோவை
– 641001
பெறுநர்
திரு. தமிழக முதலமைச்சர் அவர்கள்
கோட்டைசென்னை
ஐயா,
என்னுடைய கணவர் ஷம்சுதீன். கடந்த பதினொரு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். நானும் கடந்த பதினொரு ஆண்டுகளாக என்னுடைய கணவரை நேர்காணலில் சென்று சந்தித்துக் கொண்டுள்ளேன். ஆனால், இன்று 26.12.2008 அன்று மத்திய சிறைக்கு நேர் காணலுக்கு சென்ற பொது அங்கிருந்த சிறை அதிகாரிகள் என்னுடைய கணவர் ஷம்சுதீன் நான்கு நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். தற்போது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை நேர்க்காணல் காண முடியாது என்று கூறிவிட்;டார்கள்.
ஐயா, என்னுடைய கணவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்ற எந்த விபரமும் கூறவில்லை. ஆதனால் ஐயா, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் என்னுடைய கணவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆரிபா
கணவர் பெயர் சம்சுதீன்
கோவை
செய்தி: கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்

Saturday, December 20, 2008


மனித நீதிப் பாசறை சார்பில் தமிழகத்தில் உள்ள 5மாவட்டகளில் தமிழக சிறைகளில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையிலும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் சமநீதி வேண்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டம். நடந்தது இந்த ஆர்ப்பாட்டதிற்க்கு. மாநில நிர்வாகிகள் தலைமையில் நடந்தது .
இதில் கலந்துகொண்ட நிர்வாகி விபரம்.சென்னையில்.சையது இபுராஹிம் தலைமையில் மாநில பேச்சாளாளர் உசேன் அவாகள் சிறைப்புரை நிகழ்த்தினர் இதில் 500க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்ட்டார்கள். அதோ போல். நெல்லையில் அன்வர் தலைமையில் நெல்லைமாவட்ட செயலாலாளர் மெலளவி மகபுப் அன்சாரி பைஜி சிறப்புரை நிகழ்தினர் இதில் 350க்கும் மேற்பட்றோர்கள் கலந்மு கொண்டடர்கள். மதுரையில். மதுரைமாவட்ட செயலாளர் நசுருத்தின் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜலில் சிறப்புரை நிகழ்த்தினர்.இதில் 600க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டடார்கள். திருச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலாவுதின் தலைமையில் மாநில பேச்சாளாளர் சையது இபுராஹிம் சிறப்புரை நிகழ்த்தினர்.500க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டடர்கள்.
கடந்த செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக
சிறைகளில் 8 ஆண்டுகள் நிறைவடைந்த 1405 தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இதில் மத வழக்குகள் சம்பந்தப்பட்ட ஒரு முஸ்லிம் சிறைவாசி கூட விடுதலை செய்யப்படவில்லை. அதே போல் 2007ம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்ட 118 சிறைவாசிகளில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது.
பேண் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததை கருணை அடிப்படையில் என்று கூறிய தமிழக அரசுக்கு முஸ்லிம் சிறைவாசிகளின் மீது மட்டும் ஏன் கருணை ஏற்படவில்லை?
எனவே, சிறுபான்மையோரின் நலன் காக்கும் அரசாக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் அரசு எந்த பாரபட்சமும் காட்டாமல் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக சிறப்பு ரெமிசன்களை ஏற்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 19.12.2008 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் செஞ்சிலுவை சங்கம் முன்பாக கோவை மாவட்டத் தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் ஏ. பக்ருதீன் அவர்களின் சிறப்புரையுடன் கருணை அடிப்படையிலும், முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் சமநீதி வேண்டியும் கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உம்மர்ஷா மற்றும் கோவை தங்கப்பா, ஆகியோரும் மற்றும், சிறைவாசி குடும்ப பெண்கள் உட்பட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தீர்மானங்களாவன
1. பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பிறந்த தினத்தில் வரும் போது 2009 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் போது பாரபட்சமின்றி முஸ்லிம் சமூக வழக்கிலுள்ள ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.2. பதிமூன்று வருட தண்டனை பெற்ற முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு இவ்வாண்டு மற்றும் வருமாண்டு தண்டனை குறைப்புகளை உடனே வழங்கி அவர்களின் முன் கூட்டிய விடுதலைக்கு அரசு வழிவகை செய்தல் வேண்டும். 3. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கும், சிறைத்துறைக்கும், பரிந்துரைக்கும் காவல் துறையினர் அவர்களின் தற்போதைய மனநிலையை கருத்திற் கொண்டு அதற்கு இசைவான அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். 4. பரோல் (விடுப்பு) போன்றவற்றில் மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கும் வருடத்திற்கு 15 நாள் விடுப்பை முஸ்லிம் சிறைவாசிக்கும் பாரபட்சமின்றி வழி காவலின்றி வழங்க வேண்டும்.5. சிறைத் தண்டனை கழிந்து வெளிவருபவர்களின் மறுவாழ்விற்கு அரசு, உரிய நடவடிக்கைகள் எடுத்து அவர்களுக்கு கடனுதவி போன்றவற்றை வழங்குதல் வேண்டும். 6. சிறையில், முன் கூட்டியே விடுதலைக்கு மறுத்து மன இறுக்கத்தால் மரணமடைந்த திரு. சபூர் ரஹ்மான் போன்றோரின் நிலை மற்ற முஸ்லிம் சிறைவாசிகளுக்கு நேரா வ்ணம் விரைந்து அவர்களை விடுதலை செய்ய அரசு ஆவண செய்தல் வேண்டும்
புகைப்பட காட்சிகள்

தனது தந்தைக்காக பச்சிளம் குழைந்தை கேஷம்யிடம் காட்சி

மாநில செயலாளர் பக்ருதீன் சிறப்புரை
மாவட்டத் தலைவர் இஸ்மாயில் தலைமை உரை








செய்திகள். புகைப்படம்: கோவை தங்கப்பா
மிடியா வாய்ஸ்

Tuesday, November 4, 2008

சேலத்தில் முதல் முதலில் 4000க்கு மேற்பட்றோர் கலந்துகொண்டா
தமுமுகவின் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு !!!
எல்லா புகழும் இறைவனக்கே.
தமுமுக சார்பில் நவம்பர் 2ம் தேதி சேலத்தில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு நடந்தது.இந்த மாநாட்டியில் தமுமுக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில்,தமுமுக,சமுதாயத்தின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னிலை படுத்தி செயல்பட்டு வருகிறது நாட்டில் நடக்கும்பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,என்றார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிதம் இடஒதுக்கீட்டை,6 சதவிதமாக உயர்த்த வேண்டும், முஸ்லிம்களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீ வழங்க ஐக்கிய முற்போக்கு கூட'டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்லில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு,இனி வரும் தேர்தலில்,முஸ்லிம்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்று ஜவாஹிருலாஹ் பேசினார்.இதையடுத்தது. தமுமுக. பொதுச்செயலர். ஹைதர்அலி பேசுகையில்,நாட'டியில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும், முஸ்லிம்களால் ஏற்படுவதாக,அரசும், ஊடகங்களும், பொய் பிரசாரம், மேற்கொண்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும்.முழு விசாரணை நடத்தாமலே முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்,அப்படி, மாற்றிகொள்ளாவிட்டால், வரும் பாராளுமன்ற தேர்தலில், தமுமுக , காங்கிரஸ்க்கு எதிராக செயல்படும், மத்தியல் பா.ஜ.க. காங்கிரஸ். அல்லாது மூன்றாவாது அணியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்படும் என்றார்.இந்த மாநாட்டியில் தமுமுக. துனைபொதுச்செயலாளர்.மெளலவி ரிபாய். மாநில செயலாளர் தமிமுன் அன்சாரி,மாநிலதுனை செயலாளர் கோவை சாதிக்,தலைமைகழக பேச்சாளர் ரபிக்,மாநில மாணவர்அணி பொருளாளர் மாயவரம் அமீன்,மாநில உலமா அணி செயலாளர் நாசர் உமரி மற்றும் பலர் உரைநிகழ்த்தினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட தலைவர். சையத் முஸ்தபா தலைமை வகித்தார்.
சேலத்தில் நவம்பர் 2 அன்று நடை பெற்ற சேலம் மாவட்ட தமுமுக
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் தற்போது பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 6 சதவிகித மாக உடனடியாக உயர்த்துமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது
2. இலங்கையில் அப்பாவி தமிழர் களுக்கு எதிராகத் தொடர்ந்து சிங்கள பேரினவாத அரசு கட்டவிழ்த்து வரும் வன்முறைகளை இந்த மாநாடு வன் மையாகக் கண்டிக்கின்றது. இந்திய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலை யிட்டு அங்கு அமைதி ஏற்பட வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த அமைதி முயற்சிகளில் இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப் படவும் வலிமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகின்றது.
3. 2001ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல் முதல் கடைசியாக அசாமில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் வரை நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர் பான வழக்குகள் மறுவிசாரணை மேற் கொள்ளப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது. ரமலான் மாதத்தின் கடைசி தினங்களில் மராட்டிய மாநிலம் மாலேகோன் மற்றும் குஜராத் மாநிலம் மொடாசவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்த மராட் டிய பயங்கரவாதத் தடுப்புப் படையி னரை (ஏ.டி.எஸ்) இம்மாநாடு பாராட்டு கிறது. இந்த வழக்கில் ஆழமாகச் சென்று முழுச் சதித்திட்டத்தையும் அதில் ஈடுபட் டோரையும் அம்பலப்படுத்த (ஏ.டி.எஸ்) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மெனவும் குண்டு வைத்த பயங்கரவாதி பெண் சாமியாருடன் தொடர்புள்ள பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கையும் உண்மை அறியும் கருவி மூலம் விசாரிக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகின்றது.
4. மாலேகோன் குண்டுவெடிப்பில் இராணுவத்தில் பணியாற்றி வரும் சிலருக்கும் ஒய்வுப் பெற்ற சிலருக்கும் தொடர்பு உள்ளது என்பதும் இவர்கள் தீவிரவாத பயிற்சிகளையும் அளித்து வந்துள்ளனர் என்பதும் நாட்டின் நலன் நாடுவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. இத்தகைய மனப்போக்குடைய அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களைக் களையெடுப்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இம் மாநாடு கோருகின்றது.
5. முஸ்லிம்களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்கப் பரிந்துரைச் செய்துள்ள நீதிபதி ரங்க நாதன் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை 2007 மே மாதம் பிரதமரிடம் அளிக்கப் பட்ட போதினும் இதுவரை அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்காத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இம்மாநாடு வன்மை யாகக் கண்டிக்கின்றது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றாத கட்சிகளுக்கு அடுத்த தேர்த லில் ஆதரவு அளிக்கக் கூடாது என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
6. தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு மின் வெட்டு பிரச்சனையை உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது
7. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலைச் செய்யப் பட்ட கைதிகளின் பட்டியலைத் தயாரிப் பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டி யுள்ளதை இம்மாநாடு கண்டிக்கின்றது. ஆயுள் தண்டனை பெற்று 7 ஆண்டு கள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்ட அனைத்து கைதிகளையும் விடு தலைச் செய்ய தமிழக அரசு உடனடி யாக ஆவணச் செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.
8. பல்வேறு நகரங்களில் குண்டு வெடிப்புகள் நடப்பதைத் தடுக்க தவறிய துடன் சங்பரிவார கும்பலின் குண்டு வெடிப்பு சதிகளை முறியடிக்க தவறிய உள்துறை அமைச்சர சிவராஜ் பாட்டீல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே. நாராயணன் ஆகியோர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது. .
செய்திகள்- படம்: கோவை தங்கப்பா
மீடியா voice
மாநாட்டு புகைப்பட காட்சி



























Saturday, November 1, 2008

தமி்ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சேலத்தில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு மற்றும் . ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.
இன்ஷா அல்லாஹ் நவம்பர் 2

Sunday, October 19, 2008