Sunday, June 6, 2010

துபாயில் பிறைமேடை இதழ்
அறிமுகம் ....

துபாயில் எலந்தகுடி ஜமாஅத் சார்பில் பிறைமேடை மாதமிரு முறை இதழ் அறிமுகம் நிகழ்ச்சி ஜீன் 3ம் தேதியன்று மாலை நடைபெற்றுது. நிகழ்ச்சிக்கு எலந்தக்குடி முத்தலிபு இக்பால் தலைமை தாங்கினார் அவர்தனது உரையில் எலந்தக்குடி ஜமாத் சார்பில் பல்வேறு கல்வி மற்றும் சமுதாய நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து விவரித்தார். எலந்தக்குடி நஜிமுதீன் வரவேற்புரை நிழ்த்தினர். சிறப்பு விருந்தினராக அமீரக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி கலந்து கொண்டார். அவர் தனது உரையில் எலந்தக்குடியைச் சேர்ந்த இக்பால் மற்றும் நஜீமுதீன் சகோதரர்கள் மேற்கொண்டு வரும் சமுதாய நலப்பணிகளைப் பாராட்டினார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானை ஆசிரியராகக் கொண்டு வெளிக்கொணரப்பட்டு வரும் பிறை மேடை இதழுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
எலந்தக்குடி ஜமாத்தினர் போன்று ஒவ்வொரு ஜமாஅத்தினரும் பிறைமேடை இதழை தங்களது பகுதிகளில் அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டு கல்வி சமுதாய மற்றும் அரசியல் விழிப்புணர்வு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். எலந்தக்குடி முத்தலிபு இக்பால் பிறைமேடை இதழை அறிமுகப்படுத்த கடைநல்லூர் அப்துல் காதர் ஜமான் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் அமீராக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி, தேரிழந்தூர் இமாம் அலி, திருச்சி அப்பாஸ், மணிகிராமம் ரியாஸ், பெருந்தோட்டம் அமீர்ஹம்ஸா, சன்னாநல்லுர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நன்றி : முதுவை ஹிதாயத்