Wednesday, December 1, 2010

தமுமுக வின் டிசம்பர் 6 தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம்

கோவையில் த.மு.மு.க சார்பில் வரும் டிசம்பர் 6, 2010 அன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பு (காந்திபுரம்) காலை 10 மணிக்கு நடக்க இருக்கிறது. இதன் கோரிக்கையாக 1-பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு குறித்த மேல் முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். 2- பாபர் மஸ்ஜித்தை இடித்த வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தவேண்டும்.3- பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் குறித்து லிபர்ஹான் கமிஷன் விசாரித்து குற்றம் சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தமுமுக மாவட்ட தலைவர். பர்கத் அலி தலைமை தாங்குகிறார்.மற்றும் இதன் எழுச்சியுரையாக தமுமுக மாநில பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும். எழுத்தாளர் பாமரன், இந்திய கம்யூஸ்டு (மா.லெ)மக்கள் விடுதலை இயக்க நிர்வாகி மீ.த. பாண்டியன் அவர்களும், பொதுநல மாணவர் எழுச்சி இயக்க தோழர்.மனுவேல அவர்களும், மக்கள் விடுதலை இயக்க தோழர்கள்,ராமச்சந்திரன்,மற்றும் பிரசன்னா அவர்களும், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர், சுல்தான் அமீர் அகியோர்கள் கலந்து கொள்கிறார்கள்.அது போல் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்படடுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட தமுமுக, கோவை மாவட்ட மமக, நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.