Sunday, June 13, 2010


கோவையில் கொட்டும் மழையில

மனித நேய மக்கள் கட்சி சார்பில

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி

இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணி...




 
கோவை 13

          உலகத்திற்கு கலாச்சாரம் கற்று கொடுத்த நமது நாடு இன்று போதை எனும் அரக்கன் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது. காந்தி பிறந்த நாட்டியில் போதையில் வரும் வருமானத்தில் அரசு நடக்கிறது என்று கூறும் கேவல் நலை தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள்.

          இன்று ஆரம்ப கல்வி மாணவர்கள் மது குடிக்கும் ஆபத்து வந்துள்ளது. பெண்களையும் மது குடிக்க தூண்டும் விளம்பரங்களை அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீட்டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீ்'டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே சாராய டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று தெரிந்தும் அந்த வருமானத்தில் அரசு நடத்தலாமா? அதற்கு நாம் அனுமதிக்கலாமா? சாலை விபத்துகள் அதிகம் நடப்பது போதையால் தான். மதுவை கொடுத்து விட்டு வாசலில் நின்று அபராதம் விதிக்கும் அவலம் நடக்கிறது.


          இந்திய சுந்திரா போராட்ட காலத்தில் பூரண மதுவிலக்கு கோரி கள், சீமை சாராயத்திற்கு எதிராக முன் நின்று போராடிய காங்கிரஸ் அரசு , மத்தியலும், மது விலக்கை உயிராய் மதித்த பெரியார்,அண்ணா வழி நடத்துவோம் என்ற கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் தமிழக தெருக்களில் டாஸ்மாக்காய் ஓடுகிறது. கோட்டால் வருமானம் இல்லாமல் அரசு நடத்த முடியுமா என்கிறார் கலைஞர். குஜராத்தில் இன்றும் மது விலக்கு அமுலில் உள்ளது. இன்று குஜராத் வளர்ச்சிப் பாதையில் முன்னியில் உள்ள போது ஏன் நம்மால் முடியாது. மேலும் அரசுக்குடாஸ்மாக் மூலம் வரும் வருவாயைக் காட்டிலும் அரசு மருத்துமனைகளில்
சாலை விபத்துக்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதும், கள், மது வகைகளில் குடல் நோய், வாய்ப்புண், கேன்சர், மனநோய் என சிகிச்சை செலவினங்களே அதிகமாகும். போதை தடுப்பு மையங்களும் மக்களின் பணம் விரயம் செய்யப்படுகிறது.

              மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழக்கமிடும் கலைஞர் அசாமில் தேயஜலைக்கு மதிதிய அரசாங்கம் ராயல்டி கொடுக்கிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும பொழுது ராயல்டி கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக நெய்வேலி நிலக்கரிக்கு,
மின்சாரத்திற்கு, கனிம வளங்களுக்கு ராயல்டி கொடுப்பதில்லை, ரயல்டி பெற்றாலே பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்கும். மக்களின் நலனை பாதுகாக்கவே அரசு க்கும் வருமானம் தேவை. மக்களுக்கு குடிக்க கொடுத்து குடியை கெடுத்து வரும் வருமானம் தேவை தானா? அதில் வரும் இலவசங்கள் இருந்தும் என்ன பயன். பெண்களுக்கு கலர் டி.வி. கொடுத்து மானாட மயிலாடா ஆட்டம் கண்டு சிந்திக்க விடாமலும், ஆண்களுக்கு மதுவை கொடுத்து சிந்திக்க விடாமலும் செய்து, இந்திய நாட்டின் சிறப்பு அம்சமான ஜனநாயகத்தை பண நாயகமாக்கும் முயற்சியை முறியடிக்க வல்லரசு கனவு இளைஞர்களே அரசியலக்கு அப்பாற்பட்டு அணிதிரள்வீர்.

              இந்த நாட்டை அடிமைபடுத்தியவனிடமே போராடி மதுவிலக்கை கொண்டு வர செய்யும் போது, சுந்ததிர இந்தியாவில் மக்கள் நல அரசு என்று கூறிக் கொள்ளும் அரசுகளிடம் நம் போராட்டம் உறுதியானால் ஏன் கொண்டு வர முடியாது. மது விலக்கு 34 ஆண்டுகள் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமுலில் இருந்தது. காந்தியும் காந்தியவாதிகளும் போதைக்கு எதிராய் போராடிய மாபெரும் மரபு நமக்கு உண்டு 1987-ல் மக்கள் குறிப்பாக பெண்களின் கடுமையான கள், சாராயம் எதிர்ப்பு போராட்டங்களாலே கள், சாராய கடை இழுத்து மூடப்பட்டன. அநீதிக்கொதிராய் மதுரையை எரித்த கண்ணகியின் வாரிசுகளே உங்களின் மணாலன்களை மனநோளியாக்கும் மதுவிற்கு எதிராய் திரும்பட்டும் உங்கள் கோப பார்வை எரியட்டும் தமிழக கள் மற்றும் டாஸ்மாக் கடைகள்.

               போதையில் தள்ளாடும் தமிழகத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்க இனியொரு விதி செய்வோம் என்ற கண்டன உரையுடன் இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணியை த.மு.மு.க. மாநில செயலாளர், இ. உம்மர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

             போதைக்கு எதிரான கோஷா முழக்கத்தயை த.மு.மு.க. மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது அவர்கள் வாகனத்தில் தொடர்ந்து முழுக்கமிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமை தாங்கினர், இதில் 200க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 350க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த வாகன பிரச்சாரப் பேரணி கோவை ஆத்துபாலம்,குறிச்சி பிரிவு, போத்தூனுர், அறிவொளி நகர் , கோவைப்புதூர், இடையர்பாளையம், முடிவில் குனியமுத்தூர்யுள்ள த.மு.மு,க , மமக , கிளை அலுவலத்தில் முடிவுஅடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ரபிக், நுர்த்தீன், மமக மாவட்ட நிர்வாகிகள், எம்.எச். அப்பாஸ், காஜா, நுர்முகம்மது, ஜபார், ஷாஜகான், பாவா நிசார், குட்டி, அப்பாஸ்,மமக நகர செயலளாளர் ரபிக், மமக இளைஞர் மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் ஹக், முத்துகாலனி காதர் அபுதாஹிர், ஜெமிஸா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்தார்கள். முடிவில் மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.

செய்தி, புகைப்படம் : கோவை தங்கப்பா