Tuesday, November 30, 2010

அருந்ததிராய் மீதான காவிப் படைத் தாக்குதலைக் கண்டிப்போம்! கருத்தரங்கம் கோவையில் நடந்தது.

கோவை 29 அருந்ததிராய், கீலானி, சபீர் அகமது, போன்றோர் மீதுதான காவி பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் காங்கிரஸ் அரசின் கைது செய்யும் முயற்சிகளை முறியடிப்போம் ! காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களின் தேச விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்போம்! தேசிய இன மக்கள் விடுதலைப்போராட்டங்கள் மீதான இந்திய அரசின் போரை எதிர்ப்போம்! என பல தலைப்புகளில் கருத்தரங்கம் கோவையில் 29ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தோழர்.சா. பாலமுருகன் (மக்கள் சிவில் உரிமை கழகம்) தலைமையில் நடந்தது. இதில் சிறப்புரையாக. எழுத்தாளர் . பாமரன். வழக்கறிஞர். திருச்சி பானுமதி, த.மு.மு.க. மாநில துனைச்செயலாளர். கோவை சையது . ஆகியோர் உரை நிகழ்த்தினர்கள். இதற்கான ஏற்பாடுகளை த,மு.மு.க, ம.ம.க, உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆகியோர் நடத்தினர்கள். இதில் 300 பேர் கலந்து கொண்டார்கள்.
த.மு.மு.க. மாநில துனைச் செயலாளர் கோவை சையது உரை

த.மு.மு.க, ம.ம.க, மாவட்ட நிர்வாகிகள்மற்றும் பார்வையாளர்கள்

செய்தி,புகைப்படம்: கோவை தங்கப்பா

சோறு கிடைக்குமா?... நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்களா?

இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை விவாதிப்பார்களா?

சோறு கிடைக்குமா? இந்த படத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும்.


சோறு சாப்பிடாம படுத்த பூச்சாண்டி பிடிச்சுடும் என்று என்குழந்தைக்கு வம்புக்கு சோறுட்டினேன். அழுதுகொண்டே வீம்புக்கு சோறுண்ட குழந்தை நிம்மதியாய் தூங்குகிறது.

தூங்கும் முன் வலைபூக்களில் ஒரு மேலோட்டம் இட்டு செல்ல வந்தவளுக்கு மனம் கணத்துவிட்டது.

திரு. மாப்ள ஃகரிசுவின் சோறு கிடைக்குமா என்ற இந்த பதிவை படித்த பின்னர் எப்படி மனம் தூங்கும்?

இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?

இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?

*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்


*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.


*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வாதியை அடையாளம் காண்பது எப்போது?

ஆண்டவனும்
இல்லை, ஆள்பவனும் இல்லை, அடித்தட்டில் இருக்கும் நான் ?
நன்றி: தமிழ்மலர்