Tuesday, December 14, 2010

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உருக்கமான உரை யாற்றினார்.

முஸ்லிம் சிறைவாசிகளின் நன்னடத்தைக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக்கொள்ளும்மாநில மாநாட்டில் தலைவர் பேராசிரியர் உருக்கமான வேண்டுகோள்


சென்னை தாம்பரம் மைதானத்தில் டிசம்பர் 11-ம் தேதி மாலை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞ ருக்கு `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்� விருது வழங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மத்திய அரசுக் கும், மாநில அரசுக்கும் பல கோரிக் கைகளை முன் வைத்து உருக்கமான முறையில் தலைமை உரை யாற்றினார்.

அப்போது அவர் இந்தி யாவின் மிகச் சிறந்த தலைவராக-அறிஞராக திகழும் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான `பாரத ரத்னா� விருதினை வழங்க மத்திய அரசு விரைவான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் தார்.

மேலும், தமிழக சிறை களில் 12 ஆண்டுகளுக் கும் மேலாக வாடிக் கொண்டிருக் கும் முஸ்லிம் சிறைவாசி களை கருணை அடிப்படை யில் விடுதலை செய்வதற்கு முதல்வர் கலைஞர் முயற்சி எடுக்க வேண்டும் என்றும், விடுதலையாகும் சிறை வாசிகளின் நன்னடத்தைக ளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப் பேற்றுக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார். இதுபற்றிய விவரம் வருமாறு-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் மாநில மஹல்லா ஜமாஅத் துகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் சமுதாய ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் மேலோங்கச் செய்ய மஹல்லா ஜமா அத்களின் நிர்வாகிகள், உலமா பெரு மக்கள், சமுதாயத்தின் அறிஞர் பெருமக்கள், சமுதாய மக்கள் அனைவ ரையும் பங்கேற்கச் செய் யும் வகையில் மாநில மாநாடு ஏற்பாடு செய்து அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப் படும் `மதநல்லிணக்க விருது�களுக்கு இந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மூன்று மதங்களுக்கும் பொதுவானவராக தேர்வு செய்து, `நானிலம் போற் றும் நல்லிணக்க நாயகர்� என்ற விருதினை வழங்கி சமுதாயத்தின் கோரிக் கைகளை முன் வைக்கும் வகையில் பிரம்மாண் டமான மாநில மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

எழுச்சிகரமான மாநாடு
மிக எழுச்சியுடனும், உணர்ச்சிகரமாகவும் நடந்தேறிய இந்த மாநாட் டில் தமிழக முழுவதிலு மிருந்தும் பல லட்சக் கணக்கானோர் பங்கேற்ற னர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பச்சிளம் பிறைக்கொடியை ஏந்தி பிரம்மாண்டமாய் நடத் திய பேரணியும், அதனைத் தொடர்ந்து விருது வழங் கும் விழா நிகழ்வுகளும் நடந்தேறின

விழாவுக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கலை ஞர் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதன் நோக்கம் குறித்தும், விருதுக்கான தகுதி சான்றுரையினை வாசித்தும் தலைமையுரை யாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது-

லட்சோப லட்ச மக்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அழைப் பினை ஏற்று லட்சோப லட்சக் கணக்கில் இங்கே சமுதாய மக்கள் கூடியி ருக்கிறார்கள். தமிழகத்தின் பல மாவட் டங்களிலிருந்து மட்டு மல்லாமல் இந்தியா வின் பல்வேறு மாநிலங்களி லிருந்தும் துபை, சவூதி உள்ளிட்ட வெளிநாடுகளி லிருந்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் இங்கே கூடியி ருக்கிறார்கள்.

இவ்வளவு பேரும் இங்கே கூடியிருப்பது தமிழகத்தில் நல்லாட்சி யினை நடத்திக் கொண்டி ருக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்சியினை மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும். இந்த தமிழ்ச் சமுதாயத்திறகு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில்தான்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ஆண்டு தோறும் மூன்று மதங்களைச் சார்ந்த அறிஞர்கள், சிறந்த சேவை யாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து வழங்கப் படும் `

`நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்�
சமூக நல்லிணக்க� விருது இந்த ஆண்டு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற மூன்று மதங்களுக்கும் பொதுவானவரும், அனைத்து சமுதாயத் திற்கும் பொதுவானவரும் சிறந்த சேவையாற்றி வரு பவருமான தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கு `நல்லிணக்க நாயகர்� என்ற பெயரில் ஒரே விருதாக வழங்க முடிவு செய்து அறிவித் தோம். நாங்கள் இவ்வாறு அறிவித்ததும் ஒரு சிலர் இதனை விமர்சிக்கும் வகையில் ஏன் இந்த விருது? அது என்ன நல்லிணக்க நாயகர்? என்றெல்லாம் எங்களை கேட்டனர். அவர் கள் இப்படி கேட்டதும், நல்லிணக்க நாயகர் என் பதை `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்� என்று மாற்றினோம். ஏனெனில், குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என நிலங்களில் உள்ளோர் எல்லாம் போற் றும் தலைவராக பாலை நிலத்தில் உள்ளோரும் வாழ்த்தும் தலைவராக ஐந்து நிலங்களிலும் வாழும் அனைத்து மக்களும் வியந்து போற்றும் சாதனை களை நிகழ்த்தி வரும் முதல்வர் கலைஞருக்கு இது தான் பொருத்தமானது என்று கருதியதால்தான்.

வேறு எவராவது வந்து அது என்ன நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்? என எங்களை கேட்டிருந்தால் பிரபஞ்சம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற பெயரி லேயே இந்த விருதினை வழங்கியிருப்போம். அந்த அளவுக்கு அகில உலகமும் போற்றக் கூடிய தலைவ ராக முதல்வர் கலைஞர் திகழ்ந்து கொண்டிருக்கி றார் என்பதை இந்த சமு தாய மக்கள் நல்ல முறை யில் அறிந்து, தெரிந்து, புரிந்து தெளிந்துள்ளனர்.

இந்த விருதினை வழங் குவதன் மூலம் கலைஞர் அவர்களுக்கு புதிதாக சிறப்பு எதுவும் வந்து விடப் போவதில்லை. அவர் எல்லாவித சிறப்புகளை யும் ஏற்கனவே பெற்றவர் தான். இந்த விருதினை அவருக்கு வழங்கியதன் மூலம் எங்களுக்கு தான் சிறப்பும், புகழும் சேரும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம் என்பதன் அடையாளமாகவே இங்கே லட்சக் கணக்கில் கூடியுள்ள அனைவரும் அதனை அங்கீகரித்து வாழ்த்திக் கொண்டிருக் கிறார்கள்.

எங்களின் இந்த விருதினை பெற்றுக் கொள்ள வர வேண்டும் என்ற எங்களது அன்பான அழைப்பினை ஏற்று அவரது உடல் நிலை இவ்வளவு தூரம் பயணிக்க ஒத்து வராத நிலையிலும் இந்த சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அன்பை, பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் வகையில் வருகை தந்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், முந்தையர் வழியைத் தொடரும் தந்தையர் கலைஞர் வழி நடக்கும் தளபதி துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தவ னாக இந்த சமுதாயத்தின் சார்பில் சில தீர்மா னங்களை - கோரிக்கை களை மாநாட்டில் வாசித் தளித்தவற்றை நிறை வேற்றித் தருமாறு கேட் டுக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரி
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தலைவர் கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்கள் சுட்டிக்காட்டியபடி, வக்ஃபு வாரியம் சார்பில் துவங்கப்படவிருக்கிற மருத்துவக் கல்லூரிக்கும் உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்ற தீர்மானத் தையும் எங்கள் தீர்மானத் தோடு இணைத்து அதனை யும் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

முதல்வர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது
மேலும், இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞராக 70 ஆண்டு காலம் பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆற்றல் மிக்கத் தலைவராக விளங் கும் முதல்வர் கலைஞருக்கு மத்திய அரசு உரிய சிறப் பினை விரைவாக செய்யும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான `பாதர ரத்னா� விருதினை வழங்க வேண்டும் என்று நான் கடந்த முறை நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தேன். அதனை லட் சக்கணக்கானோர் கூடி யுள்ள இந்த மாநாட்டில் எங்களின் கோரிக்கையாக மத்திய அரசுக்கு தெரிவித் துக் கொள்கின்றோம்.

இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞரான கலைஞர் அவர்களுக்கு `பாரத ரத்னா� விருது வழங்குவதன் மூலம் அந்த விருதுக்கும் மத்திய அரசுக் கும் பெருமை சேரும் என்பதை கூறிக் கொள் கிறேன்.

முதல்வர் கலைஞர் அவர்கள், நாங்கள் கேட் டுத்தான் கோரிக்கைகள் எதனையும் செய்வார் என்பதில்லை. நாங்கள் கேட்காமலேயே எங்களது தேவைகளை புரிந்து கொண்டு நிறைவேற்றக் கூடியவர்தான் முதல்வர்.

பரிதாபத்துக்குரிய சிறைவாசிகள்
இந்த சமுதாயத்தின் சார்பில் நீண்ட காலமாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. இந்த சமுதா யத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் கேட்கக் கூடாத சிலரின் பேச்சு களை கேட்டு, தவறான சிலரால் தவறான முறை யில் வழிகாட்டப்பட்டு, திசைமாறி சென்ற அவர் கள் செய்யக்கூடாத விரும் பத்தகாத சில செயல்கள் செய்ததன் காரணமாக இன்று அவர்கள் மட்டுமல் லாது அவர்கள் குடும்பத்தி னரும் உற்றார், உறவினர் களும் சொல்லொண்ணா துயரங்களை - துன்பங் களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அவர்கள் தங்களின் எதிர்கால வாழ்வை தொலைத்து விட் டோம்.

கேட்பார் பேச்சை கேட்டு கெட்டு அழிந்து விட்டோம் என்பதை இப்போது நல்ல முறையில் புரிந்து கொண்டுள்ளனர்.

வருந்தி திருந்தியுள்ளனர்
தங்களின் செயல்களை எண்ணி, வருந்தி திருந்தி யுள்ளனர். இனி எக்காலத் திலும் தாங்கள் மட்டுமல் லாது இந்த சமுதாயத்தில் உள்ள யாரும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை யும் உணர்ந்து எங்களை அணுகி, எங்களின் விடுதலைக்கு வழி செய் யுங்கள் என்று கண்ணீரு டன் அவர்கள் மட்டு மல்லாது குடும்பத்தினரும் கதறுகின்றனர்.

நன்னடத்தைகளுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொறுப்பேற்கும்
இந்த சிறைவாசிகளின் நன்னடத்தைகளை கருத்தில் கொண்டு அவர் களின் எதிர்கால நடவ டிக்கைகளுக்கும் நன்னடத் தைகளுக்கும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக் கொள் கிறது. அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள் கின்றேன் என்று உறுதிய ளித்தவனாக 10 ஆண்டு களுக்கும் மேலாக சிறை யில் வாடும் அவர்களை விடுவிக்கத் தேவையான முயற்சிகளை முதல்வர் கலைஞர் அவர்கள் விரை வாக செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இந்த மாநாட் டில் நிறைவேற்றியுள்ள பல்வேறு கோரிக்கைகளை யும், தீர்மானங்களையும் நீங்கள் நிச்சயம் நிறை வேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை இங்கே லட் சக்கணக்கில் கூடியிருக்கிற ஒவ்வொருவருக்கும் இருக் கிறது. நீங்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு நல்லாட் சியினை தர வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து சமுதாய மக்களும் தொடர்ந்து நன்மைகளை தர வேண்டும். அதற்கு சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைத்து வகையிலும் ஒத்துழைப் பார்கள். இந்த நோக்கத் தோடு வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து தமிழகத் தின் அனைத்து மஹல்லா ஜமாஅத்களுக்கும் ஒற்றுமை பிரச்சார பய ணத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தவி ருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொண்டு எனது உரையினை நிறைவு செய்கிறேன். இவ்வாறு தலைவர் பேராசிரியர் உருக்கத்துடன் தலைமையுரையில் குறிப்பிட்டார்.

நன்றி : கே.எம்.கே


Monday, December 13, 2010

முதல்வர் பதவியை சாபமாக கருதும் கலைஞர்.!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு கடந்த டிசம்பர் 11ம் தேதி தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருது தரப்பட்டது. மேலும் அமைச்சர்கள் மைதீன் கான், தா.மோ.அன்பரசன், முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுசெயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் காயல் மகபூப், பொருளாளர் வடக்கு கோட்டையார், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மாநாட்டில் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சில பல வேண்டுகோளை முன் வைத்தனர். பள்ளிகளில் சிறுபான்மை பாடம், வெளிநாடு வாழும் மக்களுக்கு நல வாரியம், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரித்தல், தாம்பரம் சிறுவியாபாரிகளுக்கு மாற்று இடமளித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதை தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இலக்கு 2020 என்னும் நூலை வெளியிட்டு மத்திய ரயில்வே இணை மந்திரியான அகமது முதல்வர் கலைஞர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.


விருது வழங்கும் முன் துணை முதல்வர் முக.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில், '' தலைவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. இப்போது மூன்று சமூகத்துக்கும் பொதுவாக நமது தலைவருக்கு இவ்விருது வழங்கபட இருக்கிறது.. இவ்விருதை பெறுவதால் ஒன்றும் கலைஞர் சிறப்புற போவதில்லை.. அவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. தூக்குமேடை நாடகத்தில் அன்றே எம்.ஆர்.ராதா அவர்களால் நமது தலைவருக்கு கொடுத்த பட்டம கலைஞர் என்பது.. இன்னும் பல பல விருதுகளும் பட்டங்களும்... அதனால் நமது தலைவருக்கு கொடுப்பதாலே இப்பட்டம் சிறப்புறுகிறது'' என்றார்.

பின்னர் பேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காஜர் மொய்தீன் கூறுகையில்,''அண்ணா அறிவாலய்த்திலிருந்து இக்கூட்டம் நடைபெறும் இடம் வரை திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டம் நமது கலைஞரை வரவேற்றதை நாம் காணலாம். கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருதை தருவதாக பேசிய போது இது இவருக்கு தேவைதானா என்று சிலர் கேள்விகள் எழுப்பினர்.. அதன் பிறகே நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்று தருவதாக முடிவு செய்தோம்...'' என்று கூறினார்.



பின்னர் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்பட்டது. அதையடுத்து கலைஞர் நிறைவுபேருரை ஆற்றினார்.
''என்னை பற்றி புகழ்ந்து பேசிய காதர் மொய்தீன் நான் காய்தே மிலத்தின் வழி பின்பற்றுபவன் என்பதை சொல்லாமல் விட்டது மனக்குறைவாக போனது'' என்று சொன்னபோது மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

''நான் இதுபோன்ற விருதுகளை ஒன்றும் பெருமைகாகவோ, இல்லை பொருட்காட்சிகளிலோ வைக்கபோவதில்லை. எனக்காக தர நினைக்கும் மனங்களுக்காகவே இங்கு வந்திருக்கிறேன்.''

மேலும் சமச்சீர் கல்வியில் உருதுமொழிக்கான பாதுகாப்பை பற்றி
பேசுகையில், ''நமது மொழியான உருது மொழியை சிறப்பிக்க எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுப்பேன்'' என்று அவர் நமது மொழி என்றபோது மக்கள் சந்தோசத்தில் கரகோஷம் எழுப்பினார்.

'' இன்று எங்கள் ஆட்சி, நாளை வேறொர ஆட்சி வரலாம்''என்று அவர் சொல்லும்போது கூட்டத்திலிருந்து எழுந்த சப்தங்கள் என்றுமே நீங்கள் தான் என ஒலிக்க மேலும் பேசலானார், '' அது உங்கள் ஆசை.. ஏற்கனவே 40 ஆண்டுகள் நான் தான் முதல்வர் என மாநாட்டு தலைவர் சாபம் கொடுத்துவிட்டார்.. என் மேல் அவருக்கு ஏன் இந்த அளவுக்கு கோபம் என்று தெரியவில்லை.. முதல்வர் பதவியில் இன்னும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல... இன்னும் எனக்கு இயற்கை எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறதோ அதுவரை என பாப்போம்.. சிலர் எங்கள் தலைகளில் குப்பை கொட்ட எண்ணுகிறார்கள்.. அப்படி நினைப்பவர்களின் மேல் நாங்கள் கோபம் கொள்வதோ இல்லை எரிச்சலடைவதோ என செயலபடமாட்டோம்.. எங்களின் மதிப்பை அவர்களுக்கு என்றுமே புரியவைப்போம்..''



மேலும் தொடர்ந்த அவர், “தாம்பர மேம்பாலம் விரிவாக்க பணியால் இடமிழந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கும் கோரிக்கையை பரிசீலித்தது முடிவெடுக்கப்படும்.. பாதிக்கப்பட்டோரின் பட்டியல்கள் அளித்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.. முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் இடொதுக்கீடை பத்து சதவீதமாக மாற்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளனர்.. மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு.. இதை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.. அப்படி பத்து சதவீதம் கிடைக்குமேயானால் முதலில் சந்தோசிப்பது நாங்களாக தான் இருக்கும். இடையில் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கொண்டு ஆட்சியமைத்தபோது எங்களின் முதல் கோரிக்கையாக இருந்த போது மத உணர்வோ, பேதமோ இல்லாத அரசாக அமைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தோம்.. அது நடைபெற்ற வரையில் அவர்களோடு இணைந்திருந்தோம். எப்போது அவர்கள் மீண்டும் பாபர் மசூதி இடிப்பு, ஜாதி பேதம் என மீண்டும் ஆரம்பித்தார்களோ அன்றே நாங்கள் இனி எங்களுக்கு இங்கே வேலையில்லை என வெளியேறிவிட்டோம்.. அதுதான் திராவிட முன்னேற்ற கழகம். அன்று முதல் இன்றுவரை அந்த மதவாத சக்திக்கு இடம் தராமல் இருக்கிறோம். அதில் நாங்கள் கொண்ட உறுதியால் தான் இந்திய முஸ்லிம் லீக் நண்பர்கள் இன்று என்னுடன் அமர்ந்திருக்கின்றனர். இந்த அணி என்றுமே அப்படியே தான் இருக்கும்.. யார் சேர்ந்தாலும் பிரிந்தாலும் இந்த அணி மாறாது..'' என்று கூறி முடித்தார்.

Sunday, December 5, 2010

கோவையில் ஈழ ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்: தப்பியோடிய இலங்கை














கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.


இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை எம்பி காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தனர்.


கோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெரியார் திராவிட கழகத்தினர், ராஜபக்சே கூட்டாளியே திரும்பி போ, தமிழர்களை கொன்று குவித்த சிங்களனே திரும்பி போ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தனர்.


பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் வந்த போலீசார், கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்று சொன்னதின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.


திரும்பவும் கொடிசியா கண்காட்சியில் இலங்கை அமைச்சர் காசிம் பைசல், ரிஷாத் பத்யூதின் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர் என்ற தகவலை தெரிந்துகொண்டு கொடிசியா முன்பு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். வெளியேற்று வெளியேற்று சிங்கள எம்பியை வெளியேற்று என்ற கோஷத்தோடு உள்ளே நுழைந்த அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


தன் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இலங்கை எம்.பி., காசிம் பைசல், கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் கொடிசியா வாளத்தின் பின் பக்கம் வழியாக, கோவை விமான நிலைத்துக்குச் சென்று இலங்கை திரும்பினார். எதிர்ப்பு காரணமாக அமைச்சர் ரிஷாத் பத்யூதின் கோவை பயணத்தை முன்கூட்டியே ரத்து செய்தார்.


முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனை சந்தித்து, இலங்கை அமைச்சர் வருவதற்கு அதிருப்தி தெரிவித்து நாங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்வில்லை என்று கூறிவிட்டு சென்றனர்.


போலீசார் தடையை மீறி இலங்கை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிசியா அரங்கில் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.


Saturday, December 4, 2010

பாபர் மஸ்ஜித் பள்ளி மட்டும் அல்ல வரலாறு !...

இந்திய முஸ்லிம் தவ்ஹீத் ஜமாத் டிசம்பர் 6 கண்டன ஆர்பாட்டம் கோவையில்...

Friday, December 3, 2010

நீதி தேடும் பாபரி மஸ்ஜித்

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மாபெரும் கருத்தரங்கம்
டிசம்பர் 6, 2010


Thursday, December 2, 2010

முஸ்லிம் லீக் தலைவர் தமிழக முதல்வரை சந்தித்தார்

முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, சென்னையில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை மாநில தலைவர் காதர்மொய்தீன் வழங்கினார். அருகில், பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் கமுதி பஷீர், அப்துர்ரகுமான் எம்.பி.


Wednesday, December 1, 2010

தமுமுக வின் டிசம்பர் 6 தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம்

கோவையில் த.மு.மு.க சார்பில் வரும் டிசம்பர் 6, 2010 அன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பு (காந்திபுரம்) காலை 10 மணிக்கு நடக்க இருக்கிறது. இதன் கோரிக்கையாக 1-பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு குறித்த மேல் முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். 2- பாபர் மஸ்ஜித்தை இடித்த வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தவேண்டும்.3- பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் குறித்து லிபர்ஹான் கமிஷன் விசாரித்து குற்றம் சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தமுமுக மாவட்ட தலைவர். பர்கத் அலி தலைமை தாங்குகிறார்.மற்றும் இதன் எழுச்சியுரையாக தமுமுக மாநில பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும். எழுத்தாளர் பாமரன், இந்திய கம்யூஸ்டு (மா.லெ)மக்கள் விடுதலை இயக்க நிர்வாகி மீ.த. பாண்டியன் அவர்களும், பொதுநல மாணவர் எழுச்சி இயக்க தோழர்.மனுவேல அவர்களும், மக்கள் விடுதலை இயக்க தோழர்கள்,ராமச்சந்திரன்,மற்றும் பிரசன்னா அவர்களும், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர், சுல்தான் அமீர் அகியோர்கள் கலந்து கொள்கிறார்கள்.அது போல் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்படடுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட தமுமுக, கோவை மாவட்ட மமக, நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.