Saturday, February 26, 2011

கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் பெண்கள் உள்பட 350 பேர் கைது ! போக்குவரத்து பாதிப்புகள் !


மனித நேய மக்கள் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகிறது.
பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மாநாடுகள் வாகன பேரணிகள் மேலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மதுக்கடை மறியலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது கட்சியின் கோவை மாநகர சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கோவை செல்வபுரம்தெற்கு, கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி, உக்கடம் பஸ் நிலையம், போத்தனூர் ஆட்டுத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில்
உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை (25-02-2011) அன்று மாலை 4 மணிக்கு கோவை செல்வபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை த மு மு க, மற்றும் ம ம க, கட்சியினர் அதுபோல் அருகில் உள்ள
பள்ளிகூட ஆசிரியர்கள், மாணவர்கள்,அந்த பகுதி அனைத்து சமூக பொது மக்கள் ஆகியோர்கள் முற்றுகையிட்டார்கள். ஒரு மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காவல் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துனை ஆட்சியாளர், மற்றும் டாஸ்மாக்
அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை முலம் வருகிற 6ம் தேதி அந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றிகிறோம் என்று வாக்கு உறுதி அளித்தார்கள். பின்னா மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர் காவல் துறை பிறகு மாலை 8 மணிக்கு விடுதலை
செய்தினர். இந்த மறியல் போராட்டத்திற்க்கு த மு மு க. மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமையில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்பாஸ், சுலைமான், ஜாபர் சாதிக், ரபிக், உள்பட
பெண்கள் கலந்து கொண்டார்கள்.
மறியல் வீடியோ கட்சிகள்
























செய்தி : புகைப்படம், மீடியா வாய்ஸ் டிவீ

Tuesday, February 22, 2011

கோவையில் கருத்துரிமை அரங்கக்கூட்டம் த மு மு க மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லாஹ் உரை

கோவையில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் மக்கள் மீதான போரும்! கருத்துரிமை மீதான தாக்குதலும்!! என்ற தலைப்பில் மாபெரும் கண்டன அரங்கக்கூட்டம் 20-2-2011, ஞாயிறு அன்று கோவை சி. எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவோயிசம்,நக்சலிசம்,பிரிவினைவாதம்,தீவிரவாதம், என்ற பெயரில் தண்டகாரண்யப் பழங்குடி மக்கள், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் மீதான போர் மற்றும் போலி மோதல் படுகொலைகளை உடனே நிறுத்தவும், போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், இராணுவச் சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்களை திரும்ப் பெறு. பச்சை வேட்டை நடவடிக்கையை கைவிடவும். மக்கள் மீதான போருக்கெதிராகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், தொடர்ந்து குரல் கொடுத்துவரும் எழுத்தாளர் அருந்ததிராய், போர. கிலானி, சபிர் அகமது ஷா, எஸ். ஏ. ஆர் கிலானி,பினாயக் சென் , கேரளா அப்துல் நாசர் மாதனி, போன்றவர்கள் மீது பொய் வழக்குளை திரும்பப் பெறுவும், ஜனநாயக சக்திகளின் மீதான காவிபயங்கரவாதிகளின் தாக்குதல்களை உடனே தடுத்து நிறுத்தவும். என்ற பல தலைப்புகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி பல்கலைக்கழகம் செயற் தலைவர்,மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு சார்நத பேரா.கிலானி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்,தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன், இன்னும் பல மனித உரிமை ஆர்வலர்கள்,ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
கோவையில் கருத்தரங்த்திற்க்கும், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 94வது ஆம்புலனஸ் ஆர்பணிப்பு நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ள வந்த த மு மு க மாநிலத்தலைவர், மாநில பொதுச்செயலாளர், ம ம க மாநில பொதுச்செயலாளர் அவர்களை கோவை விமான நிலையத்தில், கோவை மாவட்ட த மு மு க, ம ம க, மாவட்ட நிர்வாகிகள் வரவேற்ற போது எடுத்த படம்.

மீடியா வாய்ஸ் டிவி யில் தமுமுக மாநிலத் தலைவர் சிறப்பு பேட்டி










செய்தி: புகைப்படம்: மீடியா வாய்ஸ் டிவி

Sunday, February 6, 2011

மனித நேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா கோவையில்...


கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கோவை நடந்தது... பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு கோவை சுந்தராபுரம் கடைவிதியில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்புரையாக தமுமுக மாநிலத்தலைவர் போராசியர். டாக்டர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசினர், மற்றும் தமுமுக, மமக, தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார். இதில் 1500 க்கு மேல் கலந்து கொண்டார்கள். மாலையில் கோவையில் கோட்டைமேடு, செல்வபுரம், கரும்பு கடை, ஆத்துபாலம்,பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மமக கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா, குறிச்சி நகரம் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.





மாநிலத்தலைவர் எழுச்சியுரை


மாநாடு போல் காட்சி அளிக்கும் மக்கள் கூட்டம்

இடம் இல்லாமல் தொண்டர்கள் கடை வாசல் பகுதியில் அமர்ந்து இருக்கும் காட்சி

இஸ்லாமிய பெண்கள் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்யிடம் மனு கொடுத்த போது.
அதிமுக, மதிமுக, நிர்வாகி தமுமுக மாநில தலைவருக்கு சால்வை அணிவித்தார்கள்.
கோவை செய்யது யின் எழுச்சியுரை

கோவை கோட்டை மேட்டில் புதிய கட்டபட்டா அடுக்குமாடி குடியிருப்புயை இன்னும் அடிப்படை வசதி செய்து தரப்படதா நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்வையிட்டார். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், அருகில் தமுமக மற்றும் மமக நிர்வாகிகள்.
செய்தி, புகைப்படம்: கோவை தங்கப்பா