Tuesday, February 22, 2011

கோவையில் கருத்துரிமை அரங்கக்கூட்டம் த மு மு க மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லாஹ் உரை

கோவையில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் மக்கள் மீதான போரும்! கருத்துரிமை மீதான தாக்குதலும்!! என்ற தலைப்பில் மாபெரும் கண்டன அரங்கக்கூட்டம் 20-2-2011, ஞாயிறு அன்று கோவை சி. எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவோயிசம்,நக்சலிசம்,பிரிவினைவாதம்,தீவிரவாதம், என்ற பெயரில் தண்டகாரண்யப் பழங்குடி மக்கள், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் மீதான போர் மற்றும் போலி மோதல் படுகொலைகளை உடனே நிறுத்தவும், போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், இராணுவச் சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்களை திரும்ப் பெறு. பச்சை வேட்டை நடவடிக்கையை கைவிடவும். மக்கள் மீதான போருக்கெதிராகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், தொடர்ந்து குரல் கொடுத்துவரும் எழுத்தாளர் அருந்ததிராய், போர. கிலானி, சபிர் அகமது ஷா, எஸ். ஏ. ஆர் கிலானி,பினாயக் சென் , கேரளா அப்துல் நாசர் மாதனி, போன்றவர்கள் மீது பொய் வழக்குளை திரும்பப் பெறுவும், ஜனநாயக சக்திகளின் மீதான காவிபயங்கரவாதிகளின் தாக்குதல்களை உடனே தடுத்து நிறுத்தவும். என்ற பல தலைப்புகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி பல்கலைக்கழகம் செயற் தலைவர்,மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு சார்நத பேரா.கிலானி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்,தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன், இன்னும் பல மனித உரிமை ஆர்வலர்கள்,ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
கோவையில் கருத்தரங்த்திற்க்கும், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 94வது ஆம்புலனஸ் ஆர்பணிப்பு நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்ள வந்த த மு மு க மாநிலத்தலைவர், மாநில பொதுச்செயலாளர், ம ம க மாநில பொதுச்செயலாளர் அவர்களை கோவை விமான நிலையத்தில், கோவை மாவட்ட த மு மு க, ம ம க, மாவட்ட நிர்வாகிகள் வரவேற்ற போது எடுத்த படம்.

மீடியா வாய்ஸ் டிவி யில் தமுமுக மாநிலத் தலைவர் சிறப்பு பேட்டி










செய்தி: புகைப்படம்: மீடியா வாய்ஸ் டிவி