Tuesday, December 14, 2010

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உருக்கமான உரை யாற்றினார்.

முஸ்லிம் சிறைவாசிகளின் நன்னடத்தைக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக்கொள்ளும்மாநில மாநாட்டில் தலைவர் பேராசிரியர் உருக்கமான வேண்டுகோள்


சென்னை தாம்பரம் மைதானத்தில் டிசம்பர் 11-ம் தேதி மாலை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞ ருக்கு `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்� விருது வழங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மத்திய அரசுக் கும், மாநில அரசுக்கும் பல கோரிக் கைகளை முன் வைத்து உருக்கமான முறையில் தலைமை உரை யாற்றினார்.

அப்போது அவர் இந்தி யாவின் மிகச் சிறந்த தலைவராக-அறிஞராக திகழும் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான `பாரத ரத்னா� விருதினை வழங்க மத்திய அரசு விரைவான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் தார்.

மேலும், தமிழக சிறை களில் 12 ஆண்டுகளுக் கும் மேலாக வாடிக் கொண்டிருக் கும் முஸ்லிம் சிறைவாசி களை கருணை அடிப்படை யில் விடுதலை செய்வதற்கு முதல்வர் கலைஞர் முயற்சி எடுக்க வேண்டும் என்றும், விடுதலையாகும் சிறை வாசிகளின் நன்னடத்தைக ளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப் பேற்றுக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார். இதுபற்றிய விவரம் வருமாறு-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் மாநில மஹல்லா ஜமாஅத் துகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் சமுதாய ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் மேலோங்கச் செய்ய மஹல்லா ஜமா அத்களின் நிர்வாகிகள், உலமா பெரு மக்கள், சமுதாயத்தின் அறிஞர் பெருமக்கள், சமுதாய மக்கள் அனைவ ரையும் பங்கேற்கச் செய் யும் வகையில் மாநில மாநாடு ஏற்பாடு செய்து அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப் படும் `மதநல்லிணக்க விருது�களுக்கு இந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மூன்று மதங்களுக்கும் பொதுவானவராக தேர்வு செய்து, `நானிலம் போற் றும் நல்லிணக்க நாயகர்� என்ற விருதினை வழங்கி சமுதாயத்தின் கோரிக் கைகளை முன் வைக்கும் வகையில் பிரம்மாண் டமான மாநில மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

எழுச்சிகரமான மாநாடு
மிக எழுச்சியுடனும், உணர்ச்சிகரமாகவும் நடந்தேறிய இந்த மாநாட் டில் தமிழக முழுவதிலு மிருந்தும் பல லட்சக் கணக்கானோர் பங்கேற்ற னர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பச்சிளம் பிறைக்கொடியை ஏந்தி பிரம்மாண்டமாய் நடத் திய பேரணியும், அதனைத் தொடர்ந்து விருது வழங் கும் விழா நிகழ்வுகளும் நடந்தேறின

விழாவுக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கலை ஞர் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதன் நோக்கம் குறித்தும், விருதுக்கான தகுதி சான்றுரையினை வாசித்தும் தலைமையுரை யாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது-

லட்சோப லட்ச மக்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அழைப் பினை ஏற்று லட்சோப லட்சக் கணக்கில் இங்கே சமுதாய மக்கள் கூடியி ருக்கிறார்கள். தமிழகத்தின் பல மாவட் டங்களிலிருந்து மட்டு மல்லாமல் இந்தியா வின் பல்வேறு மாநிலங்களி லிருந்தும் துபை, சவூதி உள்ளிட்ட வெளிநாடுகளி லிருந்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் இங்கே கூடியி ருக்கிறார்கள்.

இவ்வளவு பேரும் இங்கே கூடியிருப்பது தமிழகத்தில் நல்லாட்சி யினை நடத்திக் கொண்டி ருக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்சியினை மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும். இந்த தமிழ்ச் சமுதாயத்திறகு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில்தான்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ஆண்டு தோறும் மூன்று மதங்களைச் சார்ந்த அறிஞர்கள், சிறந்த சேவை யாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து வழங்கப் படும் `

`நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்�
சமூக நல்லிணக்க� விருது இந்த ஆண்டு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற மூன்று மதங்களுக்கும் பொதுவானவரும், அனைத்து சமுதாயத் திற்கும் பொதுவானவரும் சிறந்த சேவையாற்றி வரு பவருமான தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கு `நல்லிணக்க நாயகர்� என்ற பெயரில் ஒரே விருதாக வழங்க முடிவு செய்து அறிவித் தோம். நாங்கள் இவ்வாறு அறிவித்ததும் ஒரு சிலர் இதனை விமர்சிக்கும் வகையில் ஏன் இந்த விருது? அது என்ன நல்லிணக்க நாயகர்? என்றெல்லாம் எங்களை கேட்டனர். அவர் கள் இப்படி கேட்டதும், நல்லிணக்க நாயகர் என் பதை `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்� என்று மாற்றினோம். ஏனெனில், குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என நிலங்களில் உள்ளோர் எல்லாம் போற் றும் தலைவராக பாலை நிலத்தில் உள்ளோரும் வாழ்த்தும் தலைவராக ஐந்து நிலங்களிலும் வாழும் அனைத்து மக்களும் வியந்து போற்றும் சாதனை களை நிகழ்த்தி வரும் முதல்வர் கலைஞருக்கு இது தான் பொருத்தமானது என்று கருதியதால்தான்.

வேறு எவராவது வந்து அது என்ன நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்? என எங்களை கேட்டிருந்தால் பிரபஞ்சம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற பெயரி லேயே இந்த விருதினை வழங்கியிருப்போம். அந்த அளவுக்கு அகில உலகமும் போற்றக் கூடிய தலைவ ராக முதல்வர் கலைஞர் திகழ்ந்து கொண்டிருக்கி றார் என்பதை இந்த சமு தாய மக்கள் நல்ல முறை யில் அறிந்து, தெரிந்து, புரிந்து தெளிந்துள்ளனர்.

இந்த விருதினை வழங் குவதன் மூலம் கலைஞர் அவர்களுக்கு புதிதாக சிறப்பு எதுவும் வந்து விடப் போவதில்லை. அவர் எல்லாவித சிறப்புகளை யும் ஏற்கனவே பெற்றவர் தான். இந்த விருதினை அவருக்கு வழங்கியதன் மூலம் எங்களுக்கு தான் சிறப்பும், புகழும் சேரும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம் என்பதன் அடையாளமாகவே இங்கே லட்சக் கணக்கில் கூடியுள்ள அனைவரும் அதனை அங்கீகரித்து வாழ்த்திக் கொண்டிருக் கிறார்கள்.

எங்களின் இந்த விருதினை பெற்றுக் கொள்ள வர வேண்டும் என்ற எங்களது அன்பான அழைப்பினை ஏற்று அவரது உடல் நிலை இவ்வளவு தூரம் பயணிக்க ஒத்து வராத நிலையிலும் இந்த சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அன்பை, பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் வகையில் வருகை தந்துள்ள முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், முந்தையர் வழியைத் தொடரும் தந்தையர் கலைஞர் வழி நடக்கும் தளபதி துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தவ னாக இந்த சமுதாயத்தின் சார்பில் சில தீர்மா னங்களை - கோரிக்கை களை மாநாட்டில் வாசித் தளித்தவற்றை நிறை வேற்றித் தருமாறு கேட் டுக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரி
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தலைவர் கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்கள் சுட்டிக்காட்டியபடி, வக்ஃபு வாரியம் சார்பில் துவங்கப்படவிருக்கிற மருத்துவக் கல்லூரிக்கும் உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்ற தீர்மானத் தையும் எங்கள் தீர்மானத் தோடு இணைத்து அதனை யும் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

முதல்வர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது
மேலும், இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞராக 70 ஆண்டு காலம் பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆற்றல் மிக்கத் தலைவராக விளங் கும் முதல்வர் கலைஞருக்கு மத்திய அரசு உரிய சிறப் பினை விரைவாக செய்யும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான `பாதர ரத்னா� விருதினை வழங்க வேண்டும் என்று நான் கடந்த முறை நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தேன். அதனை லட் சக்கணக்கானோர் கூடி யுள்ள இந்த மாநாட்டில் எங்களின் கோரிக்கையாக மத்திய அரசுக்கு தெரிவித் துக் கொள்கின்றோம்.

இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞரான கலைஞர் அவர்களுக்கு `பாரத ரத்னா� விருது வழங்குவதன் மூலம் அந்த விருதுக்கும் மத்திய அரசுக் கும் பெருமை சேரும் என்பதை கூறிக் கொள் கிறேன்.

முதல்வர் கலைஞர் அவர்கள், நாங்கள் கேட் டுத்தான் கோரிக்கைகள் எதனையும் செய்வார் என்பதில்லை. நாங்கள் கேட்காமலேயே எங்களது தேவைகளை புரிந்து கொண்டு நிறைவேற்றக் கூடியவர்தான் முதல்வர்.

பரிதாபத்துக்குரிய சிறைவாசிகள்
இந்த சமுதாயத்தின் சார்பில் நீண்ட காலமாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. இந்த சமுதா யத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் கேட்கக் கூடாத சிலரின் பேச்சு களை கேட்டு, தவறான சிலரால் தவறான முறை யில் வழிகாட்டப்பட்டு, திசைமாறி சென்ற அவர் கள் செய்யக்கூடாத விரும் பத்தகாத சில செயல்கள் செய்ததன் காரணமாக இன்று அவர்கள் மட்டுமல் லாது அவர்கள் குடும்பத்தி னரும் உற்றார், உறவினர் களும் சொல்லொண்ணா துயரங்களை - துன்பங் களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அவர்கள் தங்களின் எதிர்கால வாழ்வை தொலைத்து விட் டோம்.

கேட்பார் பேச்சை கேட்டு கெட்டு அழிந்து விட்டோம் என்பதை இப்போது நல்ல முறையில் புரிந்து கொண்டுள்ளனர்.

வருந்தி திருந்தியுள்ளனர்
தங்களின் செயல்களை எண்ணி, வருந்தி திருந்தி யுள்ளனர். இனி எக்காலத் திலும் தாங்கள் மட்டுமல் லாது இந்த சமுதாயத்தில் உள்ள யாரும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை யும் உணர்ந்து எங்களை அணுகி, எங்களின் விடுதலைக்கு வழி செய் யுங்கள் என்று கண்ணீரு டன் அவர்கள் மட்டு மல்லாது குடும்பத்தினரும் கதறுகின்றனர்.

நன்னடத்தைகளுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் பொறுப்பேற்கும்
இந்த சிறைவாசிகளின் நன்னடத்தைகளை கருத்தில் கொண்டு அவர் களின் எதிர்கால நடவ டிக்கைகளுக்கும் நன்னடத் தைகளுக்கும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக் கொள் கிறது. அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள் கின்றேன் என்று உறுதிய ளித்தவனாக 10 ஆண்டு களுக்கும் மேலாக சிறை யில் வாடும் அவர்களை விடுவிக்கத் தேவையான முயற்சிகளை முதல்வர் கலைஞர் அவர்கள் விரை வாக செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இந்த மாநாட் டில் நிறைவேற்றியுள்ள பல்வேறு கோரிக்கைகளை யும், தீர்மானங்களையும் நீங்கள் நிச்சயம் நிறை வேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை இங்கே லட் சக்கணக்கில் கூடியிருக்கிற ஒவ்வொருவருக்கும் இருக் கிறது. நீங்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு நல்லாட் சியினை தர வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து சமுதாய மக்களும் தொடர்ந்து நன்மைகளை தர வேண்டும். அதற்கு சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைத்து வகையிலும் ஒத்துழைப் பார்கள். இந்த நோக்கத் தோடு வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து தமிழகத் தின் அனைத்து மஹல்லா ஜமாஅத்களுக்கும் ஒற்றுமை பிரச்சார பய ணத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தவி ருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொண்டு எனது உரையினை நிறைவு செய்கிறேன். இவ்வாறு தலைவர் பேராசிரியர் உருக்கத்துடன் தலைமையுரையில் குறிப்பிட்டார்.

நன்றி : கே.எம்.கே