Thursday, November 12, 2009

கோவை வணிக வளாக வெடிகுண்டு வழக்கு
அல்-உம்மா தலைவர் அன்சாரி உட்பட 10 பேர் விடுதலை தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பு

கோவை, நவ. 12லி கோவை கிளாசிக் டவர் அருகே வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி உட்படட 10 பேரை விடுதலை செய்து தனி நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள கிளாசிக் டவர் அருகில் புதரில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக அல் உம்மா தலைவர் முகம்மது அன்சாரி, சேட்டு என்ற சாந்துமுகம்மது, அப்துல் ஒசீர், முகம்மது பாசித், ஜஹாங்கீர்,யூசுப் ஷாஜகான், முகம்மது அலிகான் குட்டி, சம்ஜத் அகமது, நவாப்கான், ரியாசுல் ரகுமான். ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவாகள் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.கோவை தனி நீதிமன்றத்தில் வழக்ககு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் 42 பேர் சாட்சியம் அளித்தினர். இந்த வழக்கில் நீதிபதி கணேசன் இன்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் சரிவர குற்றங்கள் நிருபிக்கப்படாதால் 10 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த 10 பேரும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். இதில் யுசுப் ஷாஜகான் மட்டும் தண்டனை முடிந்து விடுதலையானார். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.