Tuesday, September 22, 2009

ஈ த் அன்று முஸ்லிம் பெண்கள் வாந்தி மயக்கம் ! ! !


பாட்னா : நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் ரம்ஜானையொட்டி ஏராளமான முஸ்லிம் பெண்கள் மெகந்தி வைத்துக் கொள்வது வழக்கம். ரமஜானை முன்னிட்டு சிலர் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மெகந்தியை வாங்கி தங்கள் கை, கால்களில் வைத்துக் கொண்டனர். இந்த மெகந்தியை வைத்த அடுத்த சில நிமிடங்களில்....

அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மெகந்தி வைத்த இடங்களில் கொப்புளம் காயம் ஏற்பட்டது. இதை கண்ட உறவினர்கள் உடனே அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரிசா மாநிலம் பாலசூர், பட்ராக் மாவட்டங்களில் மெகந்தி வைத்த பெண்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி அங்குள்ள மருத்துவர்கள் கூறும்போது, 'மெகந்தி வைத்ததால் மயக்கம் அடைந்த பெண்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் தற்போது பதினைந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மற்றவர்களுக்கு உரிய மருந்துகளை கொடுத்து அனுப்பிவிட்டோம்' என்றனர்.
பீகார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் சி.கே.மிஸ்ரா கூறும்போது, 'பீகாரில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மெகந்தி வைத்ததால் வாந்தி- மயக்கம் அடைந்துள்ளனர். எனவே கடைகளில் விற்கப்படும் மெகந்தியை பரிசோதனை செய்து அதில் கலப்படம் இருந்தால் தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.