Sunday, July 25, 2010

Haryana Wakf Board opens new chapter with first engg college



Beautiful view of the Mewat Engineering College

Mewat: As one of the main mentors of Jamia Hamdard’s IAS Study Circle, which produced this year’s Civil Services topper Shah Faisal, Naseem Ahmad has long believed that the “right opportunities” can make all the difference for sections of the Muslim community which remain backward.

Now, as chairman of the Haryana Wakf Board, Ahmed is overseeing one such opportunity. In the first case of its kind, the Board is setting up an engineering college in Palla village of Haryana’s Mewat district — a region with a predominantly Muslim population, with literacy rates around 20 per cent for men and below 5 per cent for women. Spread over 18 acres, Mewat Engineering College will start its first session next month with 240 students. The quota for Muslim students is 42.5 per cent seats, and applications have poured in from near and far.

In a district where such institutes are rare, villagers have welcomed the Wakf Board’s initiative with open arms. As the 13 acres the Wakf held would have proved inadequate to get the college AICTE certification (that mandates a minimum 14 acres for an engineering college), the two neighbouring villages donated six acres of land. At market price, this land would have been worth Rs 6 crore.

When construction started, there were more offers of help. Shamsuddin Khan, a local contractor, volunteered to construct the hostels at one-third the market rate. If the region’s young Congress MLA Aftab Ahmed has pitched in to get the needed government clearances, former MLA Hamid Hussein of the Indian National Lok Dal has donated one of his houses to be used as a girls’ hostel.

“All the villagers realise the importance of this college,” says Palla village sarpanch Faroukh. “Due to the paucity of right opportunities, most youngsters drop out after Class X. At present, there isn’t a single engineering college in the district. The few private ones that are coming up have exorbitant fees and are beyond the reach of the poor population.”

The first session will offer four streams of engineering — Computer Science, Electronics, Electrical and Mechanical. Twelve faculty members, including four women, have already been hired as screening continues for more positions.

“Wakf boards are associated with funding madrasas where pupils are given traditional education, which often has a strong religious flavour. But here we are making a deliberate attempt to inculcate modern thinking not only through engineering studies but through other ways as well,” says the director of the college, Munna Khan, a Ph.D from IIT-Delhi.

A 1972-batch IAS officer and former vice-chancellor of Aligarh Muslim University, Naseem Ahmed says Shah Faisal’s success in the IAS entrance cemented his conviction that “awareness for education and modernity” is coming in the community.


“Too many times, the buck is passed to the government — that it has not done enough for the community. But the community has to make its own efforts too. It has to show the inclination to reform,” he says.

One of the first to join as a lecturer was 24-year-old Aakuib Javed, who gave up a comfortable job as a software testing engineer for HCL in New Delhi.


“I grew up in this region and am well aware of the educational privations here,” he says. “Some of us were lucky to get out. But it is time that the region and the community were helped in their efforts to move forward. If we who hail from the region don’t help, who will?”


Courtesy: The Indian Express





Friday, July 23, 2010

VADDIYILLA KADAN NIDHIYAM

16 th YEAR INAUGURAL FUNCTION

and

ISLAMIC BANKING SYSTEM IN INDIA

INTRODUCTION IN COIMBATORE





Sunday, July 18, 2010

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா ! ! !

அஸஸ்லாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சமுதாய இயக்க தொண்டர்களுக்கு....
சிறைவாசிகளின் விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களுக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றமே மிஞ்சியது.
சமுதாய அமைப்புகள் சிறைவாசிகளின் விடுதலை எனும் கோரிக்கையை தொடர்ந்து மூன்றாண்டுகளாக தொய்வின்றி தொடுத்துக் கொண்டுள்ள போதிலும் செவிடன் காதில் உதிய சங்காக அரசு சமுதாய அமைப்புகளை அலட்சியப் படுத்திக் கொண்டுள்ளது. சுதந்திரம் வேண்டுமெனக் கூறியவர்களை சிறையில் அடைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போல, விடுதலையா கேட்கிறீர்கள்? வைக்கிறேன் வேட்டு என சிறைவாசிகளை வெகு தொலைவில் உள்ள சிறை களுக்கு, சிறை மாற்றம் செய்து கொண்டுள்ளது நம் தமிழக அரசு.

நொந்து நூலாகிப் போன சிறைபட்டோரின் குடும்பத்தினரோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்ற இக்கொடூர செயலை செய்பவர்களின் உள்ளம் எத்துனை கொடூரமானது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நமக்கு ஏன் இந்நிலைமை? என்பதனை முஸ்லிம் உம்மாவும் அதன் நலனுக்காக செயல்படுகின்ற அமைப்புகளும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். சமுதாய அமைப்பு களின் தலைமைகளை மதிப்பதில்லை நம் அரசு. மக்களை திரட்டி வைக்கின்ற கோரிக்கைகளுக்கும் செவி சாய்ப்பதில்லை.
சிறைவாசிகளின் விடுதலை நிச்சயம் உண்டு ஒருக்காலும் சிறைமாற்றம் நிகழாது என அரசும் உளவுத்துறையும் அளிக்கின்ற போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து கொண்டுள்ளோம். இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லவா?

கண்ணியமும் மானமும் நம் உயிரோடு கலந்துவிட்ட விஷயமல்லவா? அவை இல்லை எனில்a இழிவான வாழ்வை வாழ்ந்துதான் என்ன பயன்?

கண்ணியத்துடனும் மானத்துடனும் வாழ்ந்திடத்தானே திருக்குர்ஆனும் நபிமொழியும் நமக்கு அறிவுறுத்துகின்றன? அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் கண்ணியமும் மேன்மையும் நம்மை தேடி வருமல்லவா?

முஸ்லிம் உம்மாவும் அதன் நலன்களை அடிப்டையாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளும் ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாம் அனைவரும் முஸ்லிம்கள். தமுமுக, தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்டஆஃப் இந்தியா, முஸ்லிம் லீக், ஜமாஅத்தே இஸ்லாமி ,இந்திய தவ்ஹித் ஜமாத், என்பதெல்லாம் நமக்கு நாமே சூட்டிக் கொண்டுள்ள பெயர்கள், அடையாளங்கள்.

முஸ்லிம் என்னும் முதன்மை அடையாளத்தை பின்னுக்கு தள்ளுவதுதான் பிரிவுக்கும் இன்னபிற இழிவுக்கும் உண்மையான காரணம்.
ஒரு முஸ்லிம் துன்பத்திற்கு உள்ளானால் மற்ற மற்ற முஸ்லிம் துயரை துடைத்திட முன்வர வேண்டும். இதுதான் இஸ்லாம் நமக்கு கற்பிக்கும் பாடம்.

தமுமுக உறுப்பினருக்கு பாதிப்பு எனில், தவ்ஹீதில் உள்ளவர் நமக்கு என்ன வந்தது? நமக்கு எதற்கு வம்பு? என விட்டுவிட்டால் அவமானத்தை நமது ஆடையாக அணிந்து கொள்ள வேண்டியதுதான்.

இத்தகைய பிரிவுகளைத் தான் ஆளும் அரசும் விரும்புகின்றது. அவர்களின் சூழ்ச்சி இல்லாமலேயே நாம் பிரிந்து கிடப்பதுதான் நம்முடைய துரதிருஷ்டம்.
இந்நிலையின் காரணமாகத்தான் நாம் சமூக அரங்கில் மதிப்பிழந்து கிடக்கிறோம்.
என்று நாம் துன்பப்படுபவன் முஸ்லிம், துயருறுபவன் முஸ்லிம், அநீதிக்கு ஆளாபவன் முஸ்லிம், ஆபத்திற்கு உட்படுபவன் முஸ்லிம் என்னும் சொற் பிரயோகத்தில் ஆரம்பித்து அதற்கு செயல் வடிவம் தருகின்றோமோ, அன்றுதான் நமக்கு விடிவு காலம் பிறக்கும்.
மானிட சமுதாயத்தில் அநீதிக்கு ஆளாபவன் யாராக இருந்தாலும் அவனுக்காக குரல் கொடுத்து அநீதியை கண்டித்திட வேண்டிய தார்மீக பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு என்கின்றபோது, ஆண்டாண்டு காலமாக, அள்ளலுறும் சிறைவாசிகளுடைய விடுதலை மறுப்பிற்கும் கொடூர சிறை மாற்றத்திற்கும் எதிராக வித்தியாசங்கள் காட்டாமல் நாம் ஒன்றிணைவோம்.
நம் குரல்கள் அநீதிக்கெதிராக முழங்கட்டும். நம் கரங்கள் அநீதிக்கெதிராக உயரட்டும். அதன் அடிப்படையில் சிறைமாற்றம் செய்த முஸ்லிம் சிறைவாசி முஹம்மது அன்சாரியை மீண்டும் கோயமுத்தூர் சிறைக்கே மாற்றம் செய்திடும்வரை தொய்வின்றி நம் போராட்டங்கள் தொடர அனைவரும் இயன்ற ஒத்துழைப்பை நல்குவீர்களாக.

இவண்,
இஸ்லலாமிய ஊழியன்
கோவை தங்கப்பா

முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு துபாய் அரசு பாராட்டுச் சான்றிதழ்


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு துபாய் அரசு பாராட்டுச் சான்றிதழ்

முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபாய் மண்டலம் சார்பாக மக்கள் பயன் பெறும்
வகையில் இரத்ததான முகாம்கள் பரவலாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களில் அதிகப்படியான நபர்கள் கலந்துக் கொண்டு இரத்தத்தை
தானமாக அளித்தமைக்காக துபாய் அரசாங்கமும், துபாய் மருத்துவனைகளின் உயரிய
கூட்டமைப்பும் இணைந்து பாராட்டுச் சான்றிதழை வழங்கியது.



ஜூலை 16ம் தேதி துபாயில் முமுக ஏற்பாடு செய்திருந்த முகாமை பார்வையிட்ட
மருத்துவக் குழு அதிகாரிகள் அதன் பின் அல் வாசல் மருத்துவனையில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் இச்சான்றிதழை அமீரக மற்றும் துபாய் நிர்வாகிகளிடம் அளித்தனர்.





Tuesday, July 13, 2010

அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு
மாற்ற வேண்டும்

கோவை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்தார்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டியும், மீடியா வாயஸ் இனைதளத்தின் முதன்மை நிர்வாகி கோவை தங்கப்பா

கோவை ஜீலை 12-
திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 125- வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் விமானம் மூலம் கோவை வந்தனர். அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம், பேசுவதற்க்கு அனுமதி பெற்று. மந்திரியை அரைமணி நேரம் சந்தித்து. தமிழகத்தில் உள்ளா முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை சம்பாந்தமாகவும், அன்சாரி மீண்டும் கோவை ஜெயிலுக்கு மாற்றம் சம்பாந்தமாகவும், கோவை தங்கப்பா பேசினார். முழுமையாக கேட்டு சிறைவாசிகளின் முழு விபரங்களையும் எழுத்து முலம் பெற்று கொண்டு நான் தமிழக அரசுயிடம் பேசுகிறேன். என்று கூறினார். அருகில் மத்திய உள்துறை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுதுறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.







அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு
மாற்ற வேண்டும்

தமிழக மந்திரி பழனிசாமியிடம், சிறைத்துறை டி.ஐ.ஜி. யிடம்
த மு மு க, ம ம க, மனு


கோவை, ஜீலை. 13-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில மாநில செயலாளர் கோவை இ உம்மர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் உள்ளிட்ட 10 பேர் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலுர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். அதில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என கூறி இருந்தனர். மற்ற விபரங்களை கேட்ட அமைச்சர் நான் தமிழக முதல்அமைச்சர், சட்ட துறை அமைச்சர், கலந்து பேசிவிட்டு உங்களுக்கு நல்ல முடிவு சொல்லுகிறேன், பிறகு கோவை மத்திய சிறையில் உள்ள சிறைத்துறை துனைதலைவர் கோவிந்தராஜை சந்தித்து மனு அளித்தார். சந்தித்து விட்டு வெளியே வந்த தமுமுக மாநில செயலாளர் உம்மர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அன்சாரிக்கு இருதய நோய் நீரிழிவு நோய் உள்ளது. கைக்குழந்தைகளும் உள்ளது. அவரை எந்த வித முன் அறிவிப்பு இன்றி சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றி உள்ளனர். இங்கிருந்தால் அவரது மனைவி உறவினர்கள் சென்று பார்க்க வசதியாக இருக்கும் எனவே மனிதாபிமான அடிப்படையில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு கொண்டு வர வேண்டும், எங்கள் அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் 14 ம்தேதி நடக்க இருக்கிறது கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின் போது சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்,துனைதலைவர் பர்கத்துல்லாஹ், செயலாளர் ரபிக், பொருளாளர் அகமது கபீர், அதுபோல் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், துனைசெயலாளர்கள் அப்பாஸ், ஷாஜகான், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் அக் ஷியா நிசார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

செய்தி புகைப்படம்: மீடியா வாயஸ்


Sunday, July 11, 2010


அல் உம்மா இயக்க தலைவர் முஹம்மது அன்சாரி கோவை மத்திய சிறையில் இருந்து
சென்னை புழல் சிறைக்கு மாற்றம்


அவர் மனைவி சம்சுநிஷா மூன்று பெண் குழந்தைகளுடன்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம்



கோவை ஜீலை 11-
அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி, கோவை மத்திய சிறையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று
கோவை மத்திய சிறையில் உள்ளார். இவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றி சிறை நிர்வாகம் உத்திரவிட்டது. இதையடுத்து அன்சாரி
பலத்த பாதுகாப்புடன் (10ம் தேதி சனிகிழமை ) சென்னை புழல் சிறைக்கு கொண்டு சொல்லப்பட்டார்.

இந்த தகவலையை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே சமுதாய இயக்க தலைவர்கள், தமுமுக
தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி,கோவை இ உம்மர், முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன், அப்துல்
ரஹ்மான் எம்.பி, இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் பாக்கர், பாப்புலர் ஃபிரண்ட் மாநில துனை தலைவர் இஸ்மாயில், குணங்குடி
அனிபா, மற்றும் அரசு உயர்அதிகாரிகளுக்கு அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் அன்சாரி மனைவிக்கு தகவல் கிடைக்க புழலுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தன் மூன்று பெண் குழந்தைகளுடன்
கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம் நடத்தினர். பிறகு காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு
கோவை குற்றவியல் அலுவலக மேலாளர் மல்லிகாவிடம் மனு அளித்தனர். பிறகு கலெக்டர் வேறு நிகழ்ச்சியில் உள்ளதால் அவர்
அன்சாரி மனைவியிடம் தொலை பேசி தொடர்பு கொண்டு உங்கள் கணவரை கோவை மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாத்திற்க்கு
பரிந்துறை செய்கிறேன்.

பிறகு உள்துறை செயலாளர் அவர்களுக்கு கலெக்டர் அலுவலக முலம் மனு கொடுத்தார். அளித்தார் விபரம்
கோவையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 13 வருடங்களாக கோவை மத்திய சிறையிலேயே தன்
தண்டனை காலத்தை கழித்து வரும் எனது கணவர் முஹம்மது அன்சாரி எக்காரணமும் இல்லாமல் மிகக் கொடுமையான முறையில்
அதிகாலை 5 மணிக்கு சிறைமாற்றம் செய்யப்பட்டுள்ளார
எங்களுக்கு திருமணமாகி இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகள் உண்டு. எனது கணவர் ஏற்கனவே
கடுமையான நீரழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு இருதய நோயும் உண்டு நான் சென்ற முறை வியாழன்று
நேர்கானல் சென்ற போது மிகவும் சோர்வாக இருந்தார்.
நானும் எங்களது குடும்பத்தார் அனைவரும் கோவையில் தான் வசிக்கின்றோம். சிறைமாற்றம் செய்த காரணத்தால் எங்களின்
குடும்பத்தாருக்கும், எங்களது குழந்தைகளுக்கும் மிக நீண்ட தூரம் பயணம் செய்து மனு நேர்காணல் சென்று காண சிரமமாக இருக்கும்
என்பதை கருத்தில் கொண்டு அவரை கோவை மத்திய சிறைக்கே மாற்ற செய்து தரும்படி தாங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
என மனுவில் கூறியுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் உம்மா ஷா, கோவை தங்கப்பா, அபுதாஹிர், தாஜ்பாபு, ரபிக், ஏர்டெல் அபு ஆகியோர் செய்து வந்தார்கள்.






 

Wednesday, July 7, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இன்ஷா அல்லாஹ்

விரைவில்

புது பொழிவுயுடன

"center">

Monday, July 5, 2010

கோவையில் பந்த் அமைதியாக நடந்தது

கோவையில்  பந்த் அமைதியாக நடந்தது

கோவை ஜீலை 5,

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய் மற்றும் கியாஸ் ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வை கண்டித்தும், எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெயின் விலையை அவர்களே நிர்ணயித்து கோடிகள் பல கொள்ளை அடிக்க வழி வகுத்துக்கொடுக்கும். அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற  வேண்டும் என்பதை வலியுறுத்தி  நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்றது.

இதில் கோவையில்  மனித நேய மக்கள் கட்சி  அறிவிப்புவிடுத்தது கோவையில் அமைதியாக நடந்த புகைப்பட காட்சிகள்.





Friday, July 2, 2010

கோவையில் மமக நூதன போராட்டம்....

கோவையில்  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,  மண்ணெண்ணெய்
விலையேற்றத்தைக் கண்டித்து
மனித நேய மக்கள் கட்சி  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது....


கோவை 2,
மத்திய அரசு இந்த விலை உயர்வு திரும்ப பெறுவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கை வலியுறுத்தி கோவை மாவட்ட  மனித நேய மக்கள் கட்சியின்  சார்பாக, கோவையில் செஞ்சிலுவை சங்கம்  முன்பு, 2ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடந்தது.

இதில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துனை செயலாளர்  எம்.ஹெச்.அப்பாஸ் தலைமையிலும் தமுமுக  மாநில துனை செயலாளர் கோவை சாதிக் அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக, மாவட்ட செயலாளர்  சுல்தான் அமீர், மமக மாவட்ட துனைசெயலாளர் கே. ஷாஜகான், மமக மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ், அதுபோல் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர், தமுமுக மாவட்ட பொருளாளர் அகமது கபீர், மற்றம் தமுமுக, மமக, மாவட்ட, நகரம், கிளை நிர்வாகிகள  உட்பட 300க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் மமக நகர தலைவர் ரபிக் நன்றி கூறினார்.














செய்தி,புகைப்படம்: கோவை தங்கப்பா