Wednesday, January 13, 2010

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
CHARITABLE TRUST FOR MINORITIES
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். . .)
'புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும்'
அவனின் பேரருள் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது வழியை முறையேற்று வாழ்ந்த உத்தம சஹாபா பெருமக்கள் மீதும் தீனை நிலைநாட்டுவதற்காக தங்களின் உயிரையும் பொருளையும் அர்ப்பணித்திட்ட, அர்ப்பணித்து வருகின்ற அர்ப்பணம் செய்ய விரும்புகின்ற என அனைத்து நல் உள்ளங்கள் மீதும் நின்று நிலவட்டுமாக ‚
பரபரப்பாக நடந்து முடிந்திட்ட கோவை குண்டு வெடிப்பின் உயர்நீதிமன்ற தீர்ப்பின் விவரத்தை பத்திரிகைகளில் படித்து அறிந்திருப்பீர்கள். 43 முஸ்லிம் இளைஞர்கள் மீது ஆயுள்தண்டனை என விசாரணை நீதிமன்றம் (மாவட்ட நீதிமன்றம்) தீர்ப்பு வழங்கியது. இதில் சபூர் ரஹ்மான் என்பவர் (வயது 35) சிறையிலேயே இறப்பெய்தினார் (இன்னாலில்லாஹி). மீதமுள்ள 42 பேரில் 18 பேர்களுக்கு மட்டும் விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்து மீதமுள்ள அனைவரையும் விடுதலை செய்தது உயர்நீதிமன்றம்.

166 பேர் சிக்குண்ட இப்பிரமாண்டமான வழக்கில் தற்போது 18 பேர் மட்டும் எஞ்சியுள்ளனர். ஆண்டுகள் 12 ஆன பின்பே நிரபராதி என நியாயம் கிடைக்கப்பெற்றன. கடுமையான பொருளாதார திரட்டுதலை மேற்கொண்டு சட்ட நுணுக்கம் வாய்ந்த திறமையான வழக்கறிஞர்களை நியமித்ததன் மூலம் வல்லான் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இத்தனை சகோதரர்களும் விடுதலையாகினர். சில தூய உள்ளங்களின் உண்மையான பணிகளாலும், உம்மத்தின் உதவியினாலும், துஆவாலும் இவ்விடுதலை நல்கிற்று. இவ்வறக்கட்டளை கடந்த எட்டாண்டுகளாக நடத்தி வந்த நீதிக்கோரும் பயணத்தில் ஓரளவிற்கு நீதி கிடைத்துள்ளது, அல்ஹம்துல்லில்hஹ். இன்னும் கிடைத்திட வேண்டிய நீதியை பெறுவதற்கு உயர்நீதிமன்றம் சென்றிட வேண்டிய பணி மீதமுள்ளது. அதையும் செய்து முடித்திட வேண்டி இவ்அறக்கட்டளை (சி.டி.எம்.) களமிறங்கியுள்ளது. தொடர்ந்து உம்மத்தின் உதவியினையும், துஆவினையும் வாரி வழங்கிட வேண்டும்.

சிறைபட்டோர் துன்ப, துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. அவர்தம் குடும்பத்தினரின் துயரங்களை நிரந்தரமாக துடைத்திட ஒரே தீர்வு சிறைப்பட்டோரை விடுவிப்பதே‚ விடுவிப்பதற்குண்டான பணிகளாக இருப்பது உச்ச நீதிமன்றம் சென்று திறமையான வழக்கறிஞர்களை நியமித்து ஓர் சட்டரீதியான போராட்டம் மேற்கொண்டால், இன்ஷா அல்லாஹ் மீதமுள்ள சகோதரர்களையும் சுதந்திரக் காற்றை சுவாசித்திட செய்திடலாம் என்ற கருத்துக்கள், ஆலோசனைகள் சீனியர் வழக்கறிஞரான என். நடராஜன் அவர்கள் ஆணித்தரமாக அடித்து கூறினார்கள். இவர்தான் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கு ஆஜரான பிரதான வழக்கறிஞர் ஆவார். 18 நபர்களை தண்டிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. வழக்கின் அடிப்படையை தகர்த்து விட்டோம். உயர்நீதிமன்றத்தில் இந்த 18 பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் சட்டமல்லாத வேறு பல காரணங்களுக்காக இவர்களை தண்டித்துள்ளார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் இவர்களை சுலபமாக விடுதலை செய்திடலாம் என்பது திரு. நடராஜன் உள்பட பல வழக்கறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி முடித்திட சுமார் 75 லட்சம் ரூபாய் செலவாயிற்று. முழுக்க, முழுக்க உம்மத்திலுள்ள சில நல்ல உள்ளங்கள் செய்திட்ட உதவியாகும். இனி உச்சநீதிமன்றம் சென்றிட சுமார் ரூ. 1.25 கோடி செலவாகும் என வழக்கறிஞர் கூறியுள்ளார். ரூ. 1.25 கோடி என்பது பெரிய தொகையாக தெரிகின்றதே என்ற மனக்கிலேசம் எங்களுக்கு இருந்து வருகிறது. என்ன செய்வது? காசிற்கு தகுந்த பணியாரம் போல, காசிற்கு தகுந்த வழக்கறிஞர் மூலமே நாம் உரிய நீதியை பெறக் கூடியதோர் நீதியமைப்பின் கீழ் நாம் வாழவேண்டிய துரதிர்ஷ்ட நிலையை எண்ணி வேதனைப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய வசதி பெற்றவர்கள் நம் சமுதாயத்தில் லட்சங்கள் செலவழித்து ஒன்றிற்கு மேற்பட்ட தடவை ஹஜ்ஜை நிறைவேற்றி வருவதையும் காணலாம். அங்ஙனம் செலவழித்து ஒன்றிற்கு மேற்பட்ட தடவை புனிதயாத்திரை செல்லக்கூடியவர்களே, செலவிடும் அப்பணத்தை உள்ளூரில் உள்ள துயரங்களை போக்கவோ அல்லது உணவிற்கு வழியின்றி தவிக்கும் சோமாலியா, நைஜீரியா போன்ற வக்கிர ஏழை நாடுகளுக்கோ பயன்படுத்துங்கள். உங்களின் புனிதயாத்திரை செல்லக்கூடிய நோக்கம் நிறைவேறும் என நடப்பு உலகின் தலைச்சிறந்த ‡பிக்ஹ் அறிஞர் யூசுப் அல்கர்ளாவியின் ‡பத்வா நாம் அறிந்ததே‚ ஆகவே, ஒன்றிற்கு மேற்பட்டு புனிதயாத்திரை செல்லும் அன்பர்கள் இவ்வடிமை வாழ்வினை அகற்றிட முன்வருவீராக‚ அங்ஙனம் செல்லக்கூடிய சகோதரர்களுக்கு இம்மெயில் கண்ட அன்பர்கள் இவ்விஷயத்தை உணர்த்துவீராக‚ உம்மத்தில் வீண் விரயமாக நடந்திடும் திருமண செலவு, வைபோகமான விருந்துகள், மற்றும் ஆடம்பரங்களில் திளைத்திடுவோர் என அனைவரிடமும் இவ்வடிமைகளின் நிலைகளை விளக்கி செலவுகளை விடுதலைக்கு பயன்படுத்தினால் - கொடுத்து உதவியவர்களுக்கும், உதவி செய்ய தூண்டியவர்களுக்கும் 'சுபஹானல்லாஹ்' நிச்சயம் ஈடேற்றத்தை தந்திடுவான்.

தான, தருமங்கள் வழங்கிட வசதி பெற்றவர்களே‚ நீங்கள் அளித்திடும் உதவியின் மூலம் இவ்வடிமை வாழ்விற்கோர் முடிவு கிடைக்கிறதென்றால் உங்களின் பணம் ... படைத்த இரட்சகனிடம் எத்தகைய மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆகையால், இவ்வடிமை வாழ்வினை அகற்ற வாரிவழங்குவீராக‚ நாம் செலவழித்தது தான் ... நாம் சேர்த்து வைத்த சொத்தாகும். அதிலும் ஆண்டுக்கணக்கில் அல்லலுறும் இந்த அடிமைகளுக்கு அள்ளி அள்ளி தருவது வீணாகாத, தொலைந்து போகாத, நிரந்தரமாக பயன்தரும் டெபாசிட் ஆகும். உடனடியாக இறைவனிடம் டெபாசிட் செய்திடுவீராக‚ என முடிக்கின்றோம்.


CHARITABLE TRUST FOR MINORITIES
96, Vincent Road
Coimbatore – 641001
Email : ctmcoimbatore@gmail.com
Website: www.ctmkovai.com
Phone : 0422 2037673
Mobile : +919786093544
Our Banker : ICICI BANK LTD., OPPANAKARA STREET BRANCH, COIMBATORE – 641 001
S.B. A/C. NO. 605301208490