Saturday, May 29, 2010

தமிழக முதல்வருக்கு
முஸ்லிம் பெண்மணியின் கண்ணீர் கடிதம்.....

அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு
எனது கணவன் அப்துல் மஜித் வயது 43 த.பெ. யூசுப் தண்டனை எண்- 3239 என்பவர் கடந்த 1991-ல் கோவையில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டபின் 1998-ல் என்னை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த நான்கு மாதங்களுக்குள் சம்மந்தமில்லாமலேளே வேறு வழக்கில் எனது கணவரை கைது செய்து அவ்வழக்கில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. ஆனால் 1991-ல் நடைபெற்ற கொலை வழக்கில் எனது கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. நானும் நீதிவேண்டும் மேல் நீதிமன்றம் வரை என் கணவரின் விடுதலைக்காக என் குடும்பத்தினர் மற்றும் என் பெற்றோர் எனக்கு வழங்கிய அனைத்து பொருட்களை விற்று வழக்கை நடத்தியும், எனது கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டு விட்டது. இவ்வளவு முடிவுற்றபோது எனது கணவர் கோவை சிறையில் 15 ஆண்டுகளை கடந்து விட்டார்கள்.

இதற்கிடையில், கடந்த 2006 மற்றும் 2007ல் 10 ஆண்டு சிறைவாசம் முடிந்தவர்களையும், 2008 அண்ணா நுற்றாண்டு விழாவின்போது 7 ஆண்டு முடிந்தவர்களையும், தாங்கள் பெரும் கருணையுடன் விடுவித்தபோது வேறு வழக்கு மற்றும் மத சம்மந்த காரணம் காட்டி எனது கணவரின் விடுதலையை மறுத்து விட்டார்கள்.
நீதிமன்றத்தின் மூலமும், தங்களின் கருணை மூலமும் விடுதலை பெறுவார் என்ற எதிர்பார்த்து என் சக்திக்கு மீறி, ஒரு பெண்ணாகிய நான் பட்டபாடு துன்பமும் வேதனையும் எந்த பெண்ணும் பெறக் கூடாது என்பதுதான் என் பிரார்தனையாகவே இருக்கும்படி என் வாழ்வு அமைந்துவிட்டது.
துன்பப்படுவோரின் துயர் துடைக்க குறிப்பாக பெண்களின் கண்ணீர் துடைக்க, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் தந்ததோடு, கணவனால் கைவிடப்பட்டோருக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி அவர்களின் துயரத்தை போக்கியதோடு, உணவில்லாமல் எந்த ஒரு பெண்ணும் குழந்தையும் தமிழகத்தில் வாழக்கூடாது என்பதற்காக ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி தந்ததோடு, விறகை எரித்து அதனால் பெண்கள் விடும் கண்ணீரை துடைத்திட இலவச காஸ் அடுப்பபையும் பெண்களின் வேதனையை துன்பத்தை துடைத்து தாங்கள், தந்தையில்லாமல் இருக்கும் தாயாரும் சிறுநீரகக்கோளாரால் பாதிக்கப்பட்டும் ஆதரவு வழங்குவார் என்ற அண்ணன் கால் ஊனத்தால் கஷ்டப்பட்டும், இருக்கும் 12 வயது மகனை படிக்க வைக்கவும், அவனுக்கும், எங்களுக்கும் அன்றாடாம் வாழ தேவைப்படும் உணவிற்காக தையல் தொழில் செய்து அல்லல்பட்டும் துன்பமே வாழ்வாய் வாழ்ந்த வரும் என் கண்ணீரை துயரை வேதனையை நீங்கள் என் கணவரின் விடுதலை மூலம் துடைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எங்களின் என்றும் முதல்வராகிய உங்களிடம் கோருகிறேன்.
எவ்வளவோ அரிய பல எண்ணற்ற சரித்திர சாதனைகளுக்க சொந்தக்காரராகிய தாங்கள் எளிளோரின் துயர் துடைப்பதற்காகவே 5-வது முறையும் முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்காக உழைத்து வரும் தாங்கள், தமிழின் மேல், தமிழ்மொழியின் மேல் பற்று கொண்டு தமிழுக்காகவே தங்களை ஒப்படைத்துக் கொண்டு அதற்காகவே நாங்கள் வாழும் கோவையிலேயே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திடும் தாங்கள் கணவன் இருந்தும் இல்லாமல், வாழ்வே கேள்விக்குறியாய், எப்போதும் துன்பத்தோடும் துயரத்தையும் நீண்ட காலமாகவே அனுபவித்து இதிலிருந்து நமக்கு இறப்பு மடடுமேதான் விடுதலைபோலும் என்ற மனநிலைக்கு என்னை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டாலும், நீங்கள் இருக்கிறீர்கள் எனற் நம்பிக்கையில் உங்களால் என் கணவர் நிச்சயம் விடுதலையாகி எங்கள் வாழ்விலும் ஒளி வீசும் என்ற நம்பிக்கைதான் என்னை வாழவைத்து வருகிறது.
உலகத் தமிழ்ர்களெல்லாம் இம்மாநாட்டல், உங்களால் மகிழ்வுறம் போது எனது கணவரின் விடுதலை மூலம் நாங்களும் மகிழ்வுற்று நீண்டகால துன்பத்திலிருந்து இன்பம் கண்டிட எங்களின் மேல் கருணைகாட்டி எனது கணவருக்கும் அதுபோல் அவர்யுடன் உள்ள மற்ற சகோதரர்களையும் பொதுமன்னிப்பு விடுதலை வழங்கிட கனிவுடன் வேண்டுகிறேன். துயருறும் என்னைப் போன்ற பெண்களின் கண்ணீர் துடைத்திடவும் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்....

இப்படிக்கு
யாஸ்மின்
கோவை

Sunday, May 23, 2010



சிறுபான்மை  உதவி அறக்கட்டளை  அலுவலகத்தில்
முஸ்லிம் லீக்  எம். பி. அப்துல் ரஹ்மான்



கோவை 22
கோவைக்கு முஸலிம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது  சிறைவாசிகளுக்காக இயங்கி வரும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை அலுவலத்திற்க்கு வருகை தந்தார்.அப்போது சிறைவாசி குடும்பங்களை சந்தித்தார். அப்போது 40க்கு மேற்பட்ட சிறைவாசி குடும்ப்தார்கள் அப்துல் ரஹ்பான் எம்.பி யிடம் வருகின்ற ஜின் மாதம் கோவை நடைபெறுகின்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு அன்று 13 வருடங்களாக  சிறைகளில் இருக்கும் எங்கள்  சகோதரர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க. எம்.பி யிடம்
மனு கொடுத்தார்கள். அந்த மனுவை பெற்று கொண்டு. இன்ஷா அல்லாஹ் நான் சென்னை சென்றயுடன் மாநில தலைவர் காதர்மைதின் அவர்களை கலந்து பேசிவிட்டு நானும் தலைவர் அவர்களும்,பொதுச்செயலாளர் அவர்களும். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அவர்களையும், துனை முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து. எங்கள் சமுதாயத்திற்க்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் இருந்தால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் 13 ஆண்டு களாமாக பல் வேறு மத்திய சிறைகளில் உள்ளனர்.  அண்ணாவின் ஆட்சி காலத்தில் செம்மொழி மாநாடு அன்று கைதிகளை விடுதலை செய்தது போல் நிங்கள் எங்கள் சமுதாய இளைஞர்களை் விடுதலை செய்யவேண்டு.என்று  எங்கள் முதல் கோரிக்கையாக முன் வைக்கிறோம். என்று சிறைவாசி குடும்பங்களை பார்த்து சொன்னார். பிறகு  சிறைவாசி குடும்பங்களின் சுழ்நிலைகளை பற்றி கேட்டு அறிந்தார். ஒவ்வொரும் தன் குடும்ப சுழ்நிலைகளை கேட்டு அவர்களின் துன்பங்கள், கஷ்டங்களை பார்த்து  கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். பிறகு சிறைவாசி  குடும்பகளை பார்த்து உங்கள்  ஆண் மக்கள் சிறையில் இருந்து வரும்வரை உங்களுக்காக  முழு நேரமமும் கவணம் செலுத்துவேண் என்று உறுதி அளித்துவிட்டு கிளம்பி போனர். அவர்யுடன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள். நெல்லை மஜித், கோவை நிர்வாகிகள் உசேன், பஷிர், கபூர், நாசர்,ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
இதற்கான ஏற்பாட்டுகளை  மேலபாளைம்  கிச்சான் புகாரி, நாகூர் ஆமானி, கோவை தங்கப்பா, சக்தியமக்களம்  அலிகான் குட்டி, எம்.எஸ் எம். அபுதாஹிர், பாசித் ஆகியோர்கள் செய்து வந்தார்கள்.



சிறைவாசி குடும்பங்கள் அப்துல் ரஹ்மான் எம் பி யிடம் மனு கொடுத்த படம்


சிறைவாசி குடும்பங்களின் குறைகளை கவணமாக  அறிகிறார்

 சில நாட்களுக்கு முன்பு விடுதலையான குணங்குடி அனிபா அவர்யுடன் விடுதலையான சக்தியமங்களம் சேர்ந்த 
அலிகான் குட்டியிடம் விடுதலையான விபரங்களை கேட்கிறார்.

இரண்டு ஆண்டுககளாக சிறையில் இரண்டு கிட்னியும் பாதிக்கபட்ட சிறைவாசி
அபுதாஹிர்யிடம் உடல் நலம் விசாரிக்கிறார். இவர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளர் இவர் தற்காலியா 3 மாத ஜமீன் பெற்றுயிருக்கிறார். இந்த அபுதாஹிர்காக
பல முறை சிறைதுறை அதிகாரியிடமும். அரசுயிடம் நிறந்தரா விடுதலைக்காக
முயற்ச்சி  செய்து வருகிறது  முஸ்லிம் லீக் என்று  எம்.பி கூறினார்.


சிறைவாசி அபுதாஹிர்  அப்துல் ரஹ்மான்  எம்.பி யிடம் மனு கொடுக்கிறார்.அதை பெற்று கொண்டு உனது விடுதலைகாக முயற்சி செய்கிறோன்
அருகில் நெல்லை மஜித்




கோவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது இதில்  
அப்துல் ரஹ்மான் எம்.பி . பேசிய போது....


Thursday, May 20, 2010

சமுதாய மனசாட்சியை நோக்கி .....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் . . . . )
கடந்த கால நிகழ்வுகள் பல நம் நினைவுகளிலிருந்து அகன்றுவிட்டன. ஆனாலும் சில நிகழ்வுகளை நினைவில் நிறுத்திடும் நினைவுச் சின்னங்கள் உண்டு. அப்படி நம் கடந்த கால நினைவுகளின் நினைவுச் சின்னங்கள் தங்கள் வாழ்வையே சின்னாபின்னமாக்கி சிறைக் கொட்டடியில் அடிமைகளாய் உயிர்வாழƒ உண்பதையும், உடுத்ததையும், மட்டும் அசைபோடும் மனிதர்களை நாம் ? இன்று நாம் சுகபோகமாங் வாழ்கின்றோமோ, இல்லையோ, ஆனால், சுதந்திரமாய், சுயமரியாதையாய் வாழ வழி வகுத்தது அந்த அடிமைச் சிறை கூட்டம் அல்லவா‚? ஒரு கூட்டம் வமை;பு மீறியது என்பது எந்த அளவிற்கு உண்மையோƒ அந்த அளவிற்கு உண்மை ஒரு கூட்டத்தால் ஒரு சமூகமே (சுயமரியாதையோடு) வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும்.

நமக்கு வாழ்வளித்த அந்த கூட்டம் இன்று வாழ்விழந்து தவித்திட நாம் அவர்களுக்கு செய்திடும் கைமாறுதான் என்ன? நாம் அவர்களின் போராட்ட வழிமுறைகளை ஆதரிக்க சொல்லவில்லை. தன் சமூகத்திற்காக தன்னையே அர்ப்பணித்து பதிமூன்று வருடங்களாய் சிறையில் வாடும் நல்உள்ளங்களின் தியாகத்தினை மதிக்கவும், நன்றிகாட்டவும் வேண்டுகிறோம். உங்கள் வீட்டு உயிர் இழப்பையும், பொருள் இழப்பையும் தன் சொந்த இழப்பாய் கருதி சிறை கண்டவன் சந்தித்த இழப்புகள் தான் எத்தனை, எத்தனைƒ தன் இழப்பை மட்டுமா இழந்தான்ƒ தன் இளமையை மட்டுமா இழந்தான்ƒ தன் இல்லத்தவரை ஒருவர் ஒருவராய் இழந்து ஒற்றை மனிதாய் (அநாதையாய்) தனிமைச்சிறையில்‚ எட்டி நின்று ஏன் என்று கேட்கக்கூட நாதியில்லை‚ உன் வீட்டு தவிப்பை கண்டு உள் அருகி(ஊரி)லிருந்து மட்டுமல்ல, உன் இழப்பின் செய்தி எட்டிய திசைகளிலிருந்தெல்லாம் புழுவாய் துடித்து வந்தவன்ƒ இன்று அணுஅணுவாய் சிறைக் கொட்டடியில் செத்துப் பிழைத்து கொண்டிருக்க, செத்துப் போன உணர்வுளோடு சுத்தமாய் கடந்த கால நிகழ்வுகளை மறந்து சுற்றித் திரிகிறான. அன்று தனிமனிதர்களால் நின்று சமூகத்திற்காக தம்மையே அர்ப்பணித்தவர்களுக்கு, இன்று ஒரு சமூகமாய் நின்று மீட்சி (விடுதலை) தர மனதில்லையா‚? அல்லது நம்மில் மனிதம் தான் இல்லையா‚?

இன்னும் இன்னும் எத்துனை காலம் மௌனம் காப்பாய், மனம் மட்டும் இருந்திருந்தால் இரு மரணங்களை கண்டு விட்ட மத்தியசிறை பதில்கள் கூட மௌனம் கரைத்திருக்கும் (2002ல் தஸ்தகீர் வயது - 65 மரணம், 2007-ல் சபுர் ரஹ்மான் வயது - 35 மரணம்) சில கற்களில் கூட ஈரம் வழிந்ததோடுவதுண்டு எனச் சொல்வார்கள். ஆனால் உங்கள் கல்புகளின் ஓரங்களில் கூட ஈரங்கள் இல்லையா இந்த அபலைக்களுக்காக‚

விமர்சனங்களையே விரிவாய் பதிவு செய்து விட்டாலும் விட்டு விலகாத நினைவுகளாய் நெஞ்சில் நிலைத்திருக்கும் நல்உள்ளங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் எல்லா காலங்களிலும் அநாதரவற்ற சிறiவாசிகளுக்காக இயன்றதை செய்து இயலாமைக்காக விசனப்பட்டு துஆ செய்தவர்கள். மீண்டும், மீண்டும் அவர்களுக்காக நன்றிகளை பதிவு செய்து கொள்கிறோம்.

கோவை தங்கப்பா
media voice

Monday, May 17, 2010

TECHNO - ISLAM 10
KOVAI







Friday, May 7, 2010

நீலகரி மாவட்ட மனித நேய மககள் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஷேக் அப்பதுல்லா, உட்பட 6 பேர் உடல் அடக்கம்

ஊட்டி,மே 6- கரூர் அருகே விபத்தில் 6 பேரின் உடல் நேற்று காலை 10 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
நீலகரி மாவட்ட ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா வயது 45 நீலகரி மாவட்ட மனித நேய மககள் கட்சி யின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார் மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அதுபோல் சிங்கர் போஸ்ட் டை சேர்ந்த யூனுஸ் என்ற அப்துல் கனி வயது 42 இவர் மனித நேய மககள் கட்சி யின் ஊட்டி நகரச் செயலாளராகவும் மாட்டிறைச்சி வியாபரம் செய்து வருகிறார்.

அது போல் மற்றவர்கள் சபியுல்லா வயது (32),எஹ்ஸான் வயது(22),மதீன் வயது(32),சைபுதீன் வயது(37). 6 பேரும் நண்பர்கள். அப்துல் கனி அருவங்காட்டியில் நிலம் வாங்க முயன்றார். நில உரிமையாளர் திருச்சி அருகேயுள்ள ஒரு ஊரில் உள்ளதால், அவரை சந்திப்பதற்காக நேற்று முன் தினம் 6 பேரும் காரில் சென்றனர். 11 மணியளவில் கார், கரூர் அருகேயுள்ள சரசம்பட்டி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. எதிரே வந்த டிப்பர் லாரியின் முன்பக்க சக்கரம் முறிந்து, கட்டுப்பாட்டை இழந்த கார் மீது பயங்கரமாக மோதியதில் 6 பேரும் உடல் நசுங்கி பலியாயினர். உடனே கோவை மாவட்ட தமுமுக, மகக ,நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கி தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமகவின் 6 ஆம்புலானஸ்யுடன் விரைந்தினார். பலியான 6 பேரின் ஜனாஸாவை கரூர் அரசு மருத்துவனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு, நள்ளிரவு 1 மணிக்கு தமுமக,மமக,நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. இரவுவோடு இரவாக ஊட்டிக்கு 6 ஆம்புலானஸ் முலம் எடுத்து சொல்லாப்பட்டது.
நேற்று 6ம் தேதி காலையில் பொதுமக்கள் பார்வையிட ஊட்டி பெரியபள்ளி வாசல் வாளகாத்தில் 6 போரின் ஜனாஸாவை பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், ஜமாதார்கள், அனைத்து சமூக மக்களும் பார்வையிட்டார்கள். பிறகு காலை 10 மணியளவில் ஊட்டியில் உள்ள கபர்ஸ்தான்க்கு எடுத்து சொல்லப்பட்டது. இதில் ஆயிரத்திற்க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
ஜனாஸா அடக்கம் முடிந்தயுடன் இரக்கல் கூட்டம் நடந்தது. இதில் தமுமுக மாநிலசெயலாளர் கோவை உம்மர் அவர்கள் தலைமையில் நடந்து. பிறகு இதில் தி மு க தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னாள் சட்ட மன்ற கொரடா ப மு முபராக், ஊட்டி அதிமுக நகர செயலாளர்,தேமுதிக செயலாளர்,காங்கிரஸ் நகர தலைவர்,ஊட்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பலர் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இறுதியில் மனித நேய மக்கள் கட்சி மாநில துனைச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தினர் இதில்'அவர் மரணம் அடைந்தா 6 பேர்க்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார். அப்போது அருகில் இருந்த ப மு முபரக் நான் உடனடியாக அரசுக்கும், தமிழக முதல்வர்க்கும் பேக்ஸ் கொடுத்து நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார்.
இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு ஊட்டி மார்கட் பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.
இந்த துயார சம்பவத்தை கேட்ட கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தமுமுக, மமக, நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலானோர் ஊட்டியில் குவிந்தனர்.
ஊட்டியே சேகத்தில் திகழ்ந்தது.
மரணம் அடைந்த 6 நபர்களின் குடும்ப விபரம் 1,ஷேக் அப்துல்லாவுக்கு மனைவி, ஒரு ஆண் ஒரு பெண் குழைந்தைகள். 2, யூனுஸ்க்கு மனைவி, இரண்டு குழைந்தைகள். 3,மதீன்க்கு மனைவி, முன்று ஆண் குழைந்தைகள், ஒரு பெண் குழைந்தைகள். 4, சைபுதீன்க்கு மனைவியும்,இரண்டு குழைந்தைகள். 5,சாதிக்க்கு மனைவியும், இரண்டு பெண் குழைந்தைகள். 6, எஹ்ஸான்க்கு திருமணம் ஆகவி்ல்லை.
இவர்களின் கப்ர் வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும், துஆ செய்யுங்கள், இவர்களின் குடும்பங்களின் ஏற்பட்ட சோதனையில் முழ்கியுள்ள இவர்களுக்கும் துஆ செய்யுங்கள்.

ஊட்டியில் இருந்து செய்திகள் புகைப்படம் : கோவை தங்கப்பா


முதல் படம்தான் மனித நேய மக்கள் ஊட்டி மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா