Sunday, January 17, 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நடத்தும் சமூக எழுச்சி மாநாடு பிப்ரவரி ௨0-21ம் தேதியில் மதுரையில் நடக்கயுள்ளது. இதையொட்டி தமிழக முழுவதும் சுவர் விளம்பரம், தெருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கோவையில் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாநாட்டு அலுவலகம் கோவை மாநகரத்தில் கோட்டைமேடு பகுதி,மற்றும் கரும்புகடை பகுதிகளில், மாநாட்டு அலுவலகம் திறப்புவிழாஞயிற்றுகிழமை நடந்தது.
மாநாட்டு அலுவலத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுகத் அலி அவர்கள் கொடி ஏற்றினார். மாநாட்டு அலுவலத்தை மாவட்ட தலைவர் ராஜா உசேன் அவர்கள் திறந்து வைத்தார். சிறப்புரையாக மாவட்ட செயலாளர் நாசர் அவர்கள். தெற்கு மாவட்ட செயலாளர் காதர் ஆகியோர்கள் உரை நிகழ்த்தினார்கள். அனைவரையும் மாவட்ட செயலாளர் ஜலில் வரவேற்றார்.

செய்தி புகைப்படம் : கோவை தங்கப்பா