Wednesday, January 27, 2010

த.மு.மு.க. தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்
எஸ்.பி. தலைமையில் விசாரனை குழு
திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. முருகசாமி இடமாற்றம்....
கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட த.மு.மு.க. தலைவரை புதன்கிழமை காலையில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அருண் அவர்கள் தலைமையில் டி.எஸ்பி.ராஜா. இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் அரசு மருத்துவ மனைக்கு வந்து. யூசுப்யிடம் விசாரனை நடத்தி அதை டி.ஐ.ஜி. பாலநாகதேவியிடம் விசாரனை அறிக்கையை கொடுத்தார்கள்.பிறகு இன்று மாலை டி.ஐ.ஜி. பாலநாகதேவி வெளியிட்ட அறிக்கையில்.
த.மு.மு.க தலைவரை தாக்கியதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகசாமி கிருஷ்ணகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைபோல் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா காத்திருப்போர் பட்டியலிலும், ஏட்டுகள் வடிவேல். முருகன் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை டி.ஐ.ஜி. பாலநாகதேவி தெரிவித்துள்ளார்.
செய்தி, புகைப்படம் : கோவை தங்கப்பா