Monday, September 15, 2008

கோவையில் மத்திய சிறை முன் முஸ்லிம் பெண்கள் முற்றுகை...

கோவை முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முன் முற்றுகை முஸ்லிம் பெண்களுக்கு தடி அடி
கோவையில் பரபரப்பு பெண்கள் ஆவேசம் !!
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை ஜெயில் முன் 200க்கும் மேற்பட்டோர் இன்று மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் தண்டனை அனுபவித்த 296ஆயுள்தணடனை கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 68முஸ்லிம் சிறைவாசிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இவர்களையும் விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முன் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள்,குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9மணிக்கு திரண்டு முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆர்.டி.ஒ. பாலச்சந்திரன் அங்கு விரைந்தார். அவரிடம்,முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் உங்கன் கோரிக்கையை எழதி தாருங்கள்.இதைனை அரசுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகளை அவரிடம் எழுதிக் கொடுத்தனர்.பின்னர் முற்றுகையைக்ககைவிட்டு கலைந்து சென்றனர்.கோவை சிறை முன் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலிஸ் அதிகாரிகள் துனை கமிஷனர் ராஜேந்திரன்.மற்றும் உதவி கமிஷனர் கோபால்சாமி மற்றும்போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
சுட்டுத்தள்ளுங்கள் சிறைவாசிகள் ஆவேசம்.....
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களையும் விடுதலை செய்யக்கோரி கோவையில் அவர்களது உறவினர்கள் முற்றுகையிட்டபோது, சிறைக்குள் சிறைவாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை வழங்குவதில் பாரபட்சம் கூடாது, எங்களையும் விடுதலைசெய்ய வேண்டும்.இல்லையெனில் தடையை மீறி சிறையிலிருந்து வெளியேறுவோம்.வேண்டுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என முஸ்லிம் சிறைவாசிகள் கோஷமிட்டனர்.இதனால் சிறைகுள் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயில் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் அவர்களை சமாதானப்படுத்தினர்.பின்னர் ஆர்ப்பாட்டம் செய்த சிறைவாசிகள் அமைதியடைந்தனர்.
இந்த சிறைமுன் நடந்த மறியல்க்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமை நடந்தது.இதில் சிறையில் இருந்து 1ஆண்டுகளுக்கு முன் விடுதலையான அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் சென்னை புழல் சிறையில் இருந்து 117கைதிகளும்,
வேலுர்சிறையில் இருந்து 9பெண்கள் உள்பட 131கைதிகளும், திருச்சி சிறையில் 7பெண்கள் உள்பட 181கைதிகளும்,பாளையங்கோட்டை சிறையில்இருந்து 272கைதிகளும்,கடலுர்சிறையில் இருந்து 128கைதிகளும்,சேலம் சிறையில்இருந்து 10கைதிகளும்,மதுரை சிறையில் இருந்து 266கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.கேரள சிறையில் இருந்து தமிழக கைதிகள் 3பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அனால் முஸ்லிம் சிறைவாசிகளின் நிலை என்ன ?
சமுதாய தலைவர்களே இதற்கு என்ன தீர்வு !!
இன்ஷா அல்லாஹ் விரைவில். சிறைவாசி குடும்பங்களின் தொடர்
போராட்டம் தெடரும்...














சமுதாயமே இந்த தாய்குலத்தின் அவலத்தை பார் இதற்ககு என்ன தீர்வு !!!


இந்த நோன்பாளியின் அவலத்தை பார் சிந்திப்பீர் !!!












விடுதலையாகும் ஆயுள் தண்டனை சிறைவாசிகள்.
படம். செய்திகள் : கோவை தங்கப்பா
mediavoice






கோவை த மு மு க வின் . ஈத் முபாரக்....