Tuesday, July 28, 2009

கோவை போலீஸ் அதிகாரி நடத்திய வெடிகுண்டு நாடகம் நூல் வெளீயீட்டு விழா நடந்தது.


கடந்த 2006 ஆண்டு ஜீலை 22 அன்று கோவையில் வெடிகுண்டு பீதியை கிளப்பிய ஹாருன்பாஷா உட்பட 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்கு புனைந்து. மனித நீதிப்பாசறையின் மீது வெடிகுண்டு பழிசுமத்தினார் உளவுத்துறை அதிகாரி ஏ.சி.ரத்தினசபாபதி.

இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி(சிறப்பு புலனாய்வுகுழு) இது பொய் வழக்கு என்று கோவை ஜே.எம்.-7 நீதிமன்றத்தில் ஈறுதி அறிக்கை சமர்ப்பித்தது.

அறிக்கை சமாப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகிறும் மேற்படி ஏ.சி.ரத்தினசபாபதி. மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் கோடிட்டு காட்டவும், இதனை மக்கள் போரட்டமாக உருவெடுக்கச் செய்யவும், மேற்படி ஆங்கில வடிவிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஈறுதி அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழில் மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்கள்.

போலிஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம் என்ற இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழா கோவையில் 26-07-09 அன்று மாலை 7-39 மணிக்கு நடைபெற்றது.இதனை தொடா்ந்து ஏ.சி.ரத்தினசபாபதி. மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்திமாபெரும் மனித உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துனைத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் நாசர் வரவே்ற்புரை நிகழ்த்தினர்.

புத்தகத்தின் ஆசிரியர் வழக்கறிஞர் முஹம்மது யுசுப் (பொதுச் செயலாளர் N.C.H.R.O தமிழ்நாடு) கருத்துரையாற்றினர்.இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட வழக்கறிஞர் பாவனி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு) பெற்றுக் கொண்டார்.
மேற்படி கோரிக்கையை வழியுறுத்தி கடந்த ஜீலை 11 முதல் 24 வரை கையெழுத்து இயக்கத்தின் மூல்ம் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்து பிரதிகளை மாவட்ட தலைவர் அப்துல் நாசர் அவாகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவாகளிடம் ஒப்படைத்தார்.இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா , வழக்கறிஞர் பாவனி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு), வழக்கறிஞர் மதுரை அழகு மணி, போரா.அ மார்கஸ், N.C.H.R.O வின் தேசிய பொது செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது செரீப், N.C.H.R.O வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மதுரை ஜின்னா, வழக்கறிஞர் மதுரை ஷாஜகான் (செயலாளர் National Lawyer Network ). ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.இக்கரத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1- ஏ.சி.ரத்தினசபாதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாமதமின்றி உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

2- மேலும் இந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

3- மேலும் இந்த பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

செய்தி-புகைப்படம்., கோவை தங்கப்பா


புகைப்பட தொகுப்பு