Monday, September 14, 2009

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பாக 2000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
கோவையில் 13 -09 -09 அன்று மாலை 5-00 மணிக்கு கோவை சங்கமம் திருமண மண்டபத்தில். கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ரமளானில் நோன்பு நோற்று இருக்கும் நோன்பாளிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் . கோவை மாவட்ட தலைவர் அப்துல் நாசர் அவா்கள் தலைமையில் கேரளா கிரீன் வேலி அகாடமியின் முதல்வர் மெளலவி அப்துர் ரஹ்மான் பாகவி அவர்களும். சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி முஹம்மது அபூதாஹிர் பாகவி அவாகள் தக்வா என்ற தலைப்பில் பயான்னும். கோவை சிறைவாசி விடுதலைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் என்ன பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினர்கள். இறுதியில் தெற்கு பகுதி செயலாளர் அப்துல் காதர் நன்றியுரை நிகழ்த்தினர். பிறகு நோன்பு திறக்கும் நேரத்தில். கஞ்சி மற்றும் பழ வகைகள். கொடுக்கபட்டது. மஹரிப் தொழுகைக்கு பிறகு பிரியாணி விருந்து கொடுக்கபட்ட்து. விருந்து முடிந்ததும். சுதந்திரதின அணிவகுப்பு குறுந்தகடு ஒளிபரப்பட்டது.