Saturday, September 12, 2009

கோவை மாவட்ட தேசிய பெண்கள் முன்னணி சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 1500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.
கோவையில் 12-09-09 அன்று மாலை 4-45 மணிக்கு சங்கமம் திருமண மண்டபத்தில் தேசிய பெண்கள் முன்னணி சார்பாக ரமளானில் நோன்பு நோற்று இருக்கும் நோன்பாளிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். இந்தி நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட தலைவர். சகோதரி ஹபீப் நிஷா தலைமை தாங்கினர். சிறப்புரையாக தேசிய துணைத் தலைவர் சகோதரி. பெனாசீர் மற்றும். மெளலவி. சையது இப்ராஹிம் உஸ்மானி அவர்களும். தமிழ்மாநில துனைத்தலைவர் சகோதரி. ஆயிஷா சித்திகா ஆகியோர்கள் சிறப்புரையாற்றினர்கள். இறுதியாக சகோதரி. பர்ஸானா நன்றியுரை நிகழ்திதினர். நிகழ்ச்சி முடிந்தயுடன் பெண்களுக்கு நோன்பு திறக்க ஏற்பாடும் அனைவருக்கும் பிரியாணி. மற்றும் நோன்பு கஞ்சி பழம் வகைகள் கொடுக்கப்பட்டது. இதற்கனான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கோவை மாவட்ட சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா நிர்வாகிகள் ஏற்பாடு செய்தார்கள். செய்தி: புகைப்படம். கோவை தங்கப்பா