Friday, July 31, 2009

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம்.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவாகள் உத்தரவின்போரில் ஒய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவாகளின் மூலம் சிறுபான்மை மக்களின் நிலையை மேம்படுத்திட ஆணையம் அமைக்கப்பட்டது.அதை தொடாந்து இந்த ஆனணயத்தின் நிறைவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.கடந்த ஆட்சியின் போது அமுலடபடுத்தாமல்மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆனையத்தின் பரிந்துரையை உடனடியாக மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக . வெள்ளி கிழமை (31-07-09) அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மனித நேய மககள் கட்சியின் மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச்செயளாளர் எம். தமிமுன் அன்சாரி சிறப்புரையாற்றினர்.இந்த ஆர்பாட்டத்தில். த மு மு க. மாவட்ட தலைவர் பஷிர். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். சுல்தான் அமீர். த மு மு க. மாவட்ட செயலாளர். ஆர். எம். ரபிக். த மு மு க. மாவட்ட பொருளாளர். அகமது கபிர். மனித நேய மக்கள் கட்சியின் . மாவட்ட துனை செயலாளாளர்.ஷாஜகான். இளைஞர் அணி செயலாளர். அப்பாஸ். கோவை தங்கப்பா. மற்றும் மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள். உட்பட கட்சி தொண்டர்கள் 500க்கு மேற்பட்றோர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி- புகைப்படம்: கோவை தஙகப்பா