Monday, June 14, 2010



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்   பி ஜே சிறப்பு பேட்டி...

10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள்


திருப்பூர்- ஜின், 14

10 சதவித இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கூட்டணியை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் தலைவர் ஜெய்னூல்ஆபுதீன் கூறினார். திருப்பூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிஜே. நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதை நம்பி முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரங்கநாத மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் கிடைத்தள்ள சலுகைகள் குறித்தும், முஸ்லிம் மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வழிமுறைகள் குறித்து அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.


இந்தியாவில் உள்ள 110 கோடி முஸ்லிம் தொகையில், 15 கோடி முஸ்லிம் முக்கள் உள்ளனர், அரசு மற்றும் தனியார்வேலைவாய்ப்புகள்,கல்வியில் 13 சதவீத முஸ்லிம் மக்கள் இடம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 3 முதல் 4 சதவீதம் தான் வாய்ப்பு கிடைக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை பாராளு மன்ற கூட்டத்தொடரில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையை அரசு வைக்க வில்லை.ரங்கநாத மிஸ்ரா அறிக்கை சம்பந்தமாக மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று கூறவில்லை.

இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய போது, அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் செயல்படுத்தப்படும் என்று பிரதாமர் கூறினார். அனைத்து கட்சியின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றுவது என்பது சிரமம். இதனால் முஸ்லிம்மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரங்கநாதமிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி, முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை சட்டமாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் அடுத்த மாதம் ஜீலை 4ம் தேதி மாபெரும் பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நடக்கிறது.

இந்த பேரணி மற்றும் மாநாட்டியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்பேசும் பிற மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் 15 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால், வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள். இது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாக இருக்கும். இதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜெய'னூல் ஆபுதீன் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் அப்துல் அமீது, மாவட்ட தலைவர் முகமது சலீம், செயலாளா அப்துல் கலாம் உடன் இருந்தனர்.


Sunday, June 13, 2010


கோவையில் கொட்டும் மழையில

மனித நேய மக்கள் கட்சி சார்பில

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி

இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணி...




 
கோவை 13

          உலகத்திற்கு கலாச்சாரம் கற்று கொடுத்த நமது நாடு இன்று போதை எனும் அரக்கன் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது. காந்தி பிறந்த நாட்டியில் போதையில் வரும் வருமானத்தில் அரசு நடக்கிறது என்று கூறும் கேவல் நலை தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள்.

          இன்று ஆரம்ப கல்வி மாணவர்கள் மது குடிக்கும் ஆபத்து வந்துள்ளது. பெண்களையும் மது குடிக்க தூண்டும் விளம்பரங்களை அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீட்டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே வெளியிடுகிறது. மது நாட்டிற்கு வீ்'டிற்கும் கேடு என்று அச்சடித்து விட்டு அரசே சாராய டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று தெரிந்தும் அந்த வருமானத்தில் அரசு நடத்தலாமா? அதற்கு நாம் அனுமதிக்கலாமா? சாலை விபத்துகள் அதிகம் நடப்பது போதையால் தான். மதுவை கொடுத்து விட்டு வாசலில் நின்று அபராதம் விதிக்கும் அவலம் நடக்கிறது.


          இந்திய சுந்திரா போராட்ட காலத்தில் பூரண மதுவிலக்கு கோரி கள், சீமை சாராயத்திற்கு எதிராக முன் நின்று போராடிய காங்கிரஸ் அரசு , மத்தியலும், மது விலக்கை உயிராய் மதித்த பெரியார்,அண்ணா வழி நடத்துவோம் என்ற கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் தமிழக தெருக்களில் டாஸ்மாக்காய் ஓடுகிறது. கோட்டால் வருமானம் இல்லாமல் அரசு நடத்த முடியுமா என்கிறார் கலைஞர். குஜராத்தில் இன்றும் மது விலக்கு அமுலில் உள்ளது. இன்று குஜராத் வளர்ச்சிப் பாதையில் முன்னியில் உள்ள போது ஏன் நம்மால் முடியாது. மேலும் அரசுக்குடாஸ்மாக் மூலம் வரும் வருவாயைக் காட்டிலும் அரசு மருத்துமனைகளில்
சாலை விபத்துக்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதும், கள், மது வகைகளில் குடல் நோய், வாய்ப்புண், கேன்சர், மனநோய் என சிகிச்சை செலவினங்களே அதிகமாகும். போதை தடுப்பு மையங்களும் மக்களின் பணம் விரயம் செய்யப்படுகிறது.

              மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழக்கமிடும் கலைஞர் அசாமில் தேயஜலைக்கு மதிதிய அரசாங்கம் ராயல்டி கொடுக்கிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும பொழுது ராயல்டி கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழக நெய்வேலி நிலக்கரிக்கு,
மின்சாரத்திற்கு, கனிம வளங்களுக்கு ராயல்டி கொடுப்பதில்லை, ரயல்டி பெற்றாலே பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்கும். மக்களின் நலனை பாதுகாக்கவே அரசு க்கும் வருமானம் தேவை. மக்களுக்கு குடிக்க கொடுத்து குடியை கெடுத்து வரும் வருமானம் தேவை தானா? அதில் வரும் இலவசங்கள் இருந்தும் என்ன பயன். பெண்களுக்கு கலர் டி.வி. கொடுத்து மானாட மயிலாடா ஆட்டம் கண்டு சிந்திக்க விடாமலும், ஆண்களுக்கு மதுவை கொடுத்து சிந்திக்க விடாமலும் செய்து, இந்திய நாட்டின் சிறப்பு அம்சமான ஜனநாயகத்தை பண நாயகமாக்கும் முயற்சியை முறியடிக்க வல்லரசு கனவு இளைஞர்களே அரசியலக்கு அப்பாற்பட்டு அணிதிரள்வீர்.

              இந்த நாட்டை அடிமைபடுத்தியவனிடமே போராடி மதுவிலக்கை கொண்டு வர செய்யும் போது, சுந்ததிர இந்தியாவில் மக்கள் நல அரசு என்று கூறிக் கொள்ளும் அரசுகளிடம் நம் போராட்டம் உறுதியானால் ஏன் கொண்டு வர முடியாது. மது விலக்கு 34 ஆண்டுகள் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமுலில் இருந்தது. காந்தியும் காந்தியவாதிகளும் போதைக்கு எதிராய் போராடிய மாபெரும் மரபு நமக்கு உண்டு 1987-ல் மக்கள் குறிப்பாக பெண்களின் கடுமையான கள், சாராயம் எதிர்ப்பு போராட்டங்களாலே கள், சாராய கடை இழுத்து மூடப்பட்டன. அநீதிக்கொதிராய் மதுரையை எரித்த கண்ணகியின் வாரிசுகளே உங்களின் மணாலன்களை மனநோளியாக்கும் மதுவிற்கு எதிராய் திரும்பட்டும் உங்கள் கோப பார்வை எரியட்டும் தமிழக கள் மற்றும் டாஸ்மாக் கடைகள்.

               போதையில் தள்ளாடும் தமிழகத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்க இனியொரு விதி செய்வோம் என்ற கண்டன உரையுடன் இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணியை த.மு.மு.க. மாநில செயலாளர், இ. உம்மர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

             போதைக்கு எதிரான கோஷா முழக்கத்தயை த.மு.மு.க. மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது அவர்கள் வாகனத்தில் தொடர்ந்து முழுக்கமிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமை தாங்கினர், இதில் 200க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 350க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த வாகன பிரச்சாரப் பேரணி கோவை ஆத்துபாலம்,குறிச்சி பிரிவு, போத்தூனுர், அறிவொளி நகர் , கோவைப்புதூர், இடையர்பாளையம், முடிவில் குனியமுத்தூர்யுள்ள த.மு.மு,க , மமக , கிளை அலுவலத்தில் முடிவுஅடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ரபிக், நுர்த்தீன், மமக மாவட்ட நிர்வாகிகள், எம்.எச். அப்பாஸ், காஜா, நுர்முகம்மது, ஜபார், ஷாஜகான், பாவா நிசார், குட்டி, அப்பாஸ்,மமக நகர செயலளாளர் ரபிக், மமக இளைஞர் மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் ஹக், முத்துகாலனி காதர் அபுதாஹிர், ஜெமிஸா, ஆகியோர் ஏற்பாடுகளை செய்தார்கள். முடிவில் மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.

செய்தி, புகைப்படம் : கோவை தங்கப்பா













Friday, June 11, 2010

த மு மு க வின்
மாபெரும் ஒற்றை கோரிக்கை பொதுக் கூட்டம்
கோவையில்.......

Tuesday, June 8, 2010



மும்பை தாக்குதலில் போலீஸ் அதிகாரி
கார்கரேயை கொலை செய்தது யார் ?
நூல் அறிமுக விழா




திருப்பூர்- 6

இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளில் முஸ்லிம் மீதே சுமத்தப்பட்டது. குறிப்பாக ஜீம்ஆ வேலையில் பள்ளியில் வெடித்த குண்டுகளுக்கும், நோன்பு திறக்கும் வேலையில் வெடித்த குண்டுகளுக்கும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தப்பட்டு அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்னர்.

ஹேமந்த் கர்கரே தீவிராத தடுப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டபின் உண்மையில் குண்டு வைத்தவர்கள் கைது செய்யப்பபட்டனர், அதானல் முப்பை தாக்குதல் எனும் நாடகத்தில் அவர் கொல்லப்பட்டார். அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மும்பையின் முன்னால் ஐ.ஐி. முஸ்ரிப் WHO KILED KARKAREY  எனம் நூலின் மூலம் வெளிக்கொணர்ந்தார்.

அதன் தமிழாக்கம் கார்கரேயை கொலை செய்தது யார்  எனும் நூல் வெளீயீட்டு விழா திருப்பூர்யில் ரோஜா மஹாழில் கடந்த  6ம் தேதி நடைபெற்றது.

இதில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி ஜக்கரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கார்கரேயை கொலை செய்தது யார்  என்ற  நூல்யை தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர்  ஜனாப் எம். குலாம் முஹம்மது வெளியீடா அதை மனித உரிமை மக்கள் வழக்கறிஞர் ப.பா. மோகன் பெற்றுகொண்டார். சிறப்புரையாக முன்னாள்  எம்.பி.  சுப்புராயன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஐக்கிய ஜமாத் துனைத்தலைவர்  நஜீர் அஹமது, பிலால் மஸ்ஜித் இமாம் ஜபருல்லா பாக்கவி, காதர்மைதின் பாக்கவி, சிறுபான்மை உதவி அறக்கட்டளை  துனைத்தலைவர்  அபுதாஹிர், ஆகியோர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முடிவில் காதர் மைதீன் நன்றி கூறினார்.இதில் 200க்கு  மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.









Sunday, June 6, 2010

துபாயில் பிறைமேடை இதழ்
அறிமுகம் ....

துபாயில் எலந்தகுடி ஜமாஅத் சார்பில் பிறைமேடை மாதமிரு முறை இதழ் அறிமுகம் நிகழ்ச்சி ஜீன் 3ம் தேதியன்று மாலை நடைபெற்றுது. நிகழ்ச்சிக்கு எலந்தக்குடி முத்தலிபு இக்பால் தலைமை தாங்கினார் அவர்தனது உரையில் எலந்தக்குடி ஜமாத் சார்பில் பல்வேறு கல்வி மற்றும் சமுதாய நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து விவரித்தார். எலந்தக்குடி நஜிமுதீன் வரவேற்புரை நிழ்த்தினர். சிறப்பு விருந்தினராக அமீரக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி கலந்து கொண்டார். அவர் தனது உரையில் எலந்தக்குடியைச் சேர்ந்த இக்பால் மற்றும் நஜீமுதீன் சகோதரர்கள் மேற்கொண்டு வரும் சமுதாய நலப்பணிகளைப் பாராட்டினார். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானை ஆசிரியராகக் கொண்டு வெளிக்கொணரப்பட்டு வரும் பிறை மேடை இதழுக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
எலந்தக்குடி ஜமாத்தினர் போன்று ஒவ்வொரு ஜமாஅத்தினரும் பிறைமேடை இதழை தங்களது பகுதிகளில் அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டு கல்வி சமுதாய மற்றும் அரசியல் விழிப்புணர்வு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். எலந்தக்குடி முத்தலிபு இக்பால் பிறைமேடை இதழை அறிமுகப்படுத்த கடைநல்லூர் அப்துல் காதர் ஜமான் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் அமீராக காயிதேமில்லத் போரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி, தேரிழந்தூர் இமாம் அலி, திருச்சி அப்பாஸ், மணிகிராமம் ரியாஸ், பெருந்தோட்டம் அமீர்ஹம்ஸா, சன்னாநல்லுர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நன்றி : முதுவை ஹிதாயத்