Friday, May 7, 2010

நீலகரி மாவட்ட மனித நேய மககள் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஷேக் அப்பதுல்லா, உட்பட 6 பேர் உடல் அடக்கம்

ஊட்டி,மே 6- கரூர் அருகே விபத்தில் 6 பேரின் உடல் நேற்று காலை 10 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
நீலகரி மாவட்ட ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா வயது 45 நீலகரி மாவட்ட மனித நேய மககள் கட்சி யின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார் மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அதுபோல் சிங்கர் போஸ்ட் டை சேர்ந்த யூனுஸ் என்ற அப்துல் கனி வயது 42 இவர் மனித நேய மககள் கட்சி யின் ஊட்டி நகரச் செயலாளராகவும் மாட்டிறைச்சி வியாபரம் செய்து வருகிறார்.

அது போல் மற்றவர்கள் சபியுல்லா வயது (32),எஹ்ஸான் வயது(22),மதீன் வயது(32),சைபுதீன் வயது(37). 6 பேரும் நண்பர்கள். அப்துல் கனி அருவங்காட்டியில் நிலம் வாங்க முயன்றார். நில உரிமையாளர் திருச்சி அருகேயுள்ள ஒரு ஊரில் உள்ளதால், அவரை சந்திப்பதற்காக நேற்று முன் தினம் 6 பேரும் காரில் சென்றனர். 11 மணியளவில் கார், கரூர் அருகேயுள்ள சரசம்பட்டி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. எதிரே வந்த டிப்பர் லாரியின் முன்பக்க சக்கரம் முறிந்து, கட்டுப்பாட்டை இழந்த கார் மீது பயங்கரமாக மோதியதில் 6 பேரும் உடல் நசுங்கி பலியாயினர். உடனே கோவை மாவட்ட தமுமுக, மகக ,நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கி தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமகவின் 6 ஆம்புலானஸ்யுடன் விரைந்தினார். பலியான 6 பேரின் ஜனாஸாவை கரூர் அரசு மருத்துவனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு, நள்ளிரவு 1 மணிக்கு தமுமக,மமக,நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. இரவுவோடு இரவாக ஊட்டிக்கு 6 ஆம்புலானஸ் முலம் எடுத்து சொல்லாப்பட்டது.
நேற்று 6ம் தேதி காலையில் பொதுமக்கள் பார்வையிட ஊட்டி பெரியபள்ளி வாசல் வாளகாத்தில் 6 போரின் ஜனாஸாவை பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், ஜமாதார்கள், அனைத்து சமூக மக்களும் பார்வையிட்டார்கள். பிறகு காலை 10 மணியளவில் ஊட்டியில் உள்ள கபர்ஸ்தான்க்கு எடுத்து சொல்லப்பட்டது. இதில் ஆயிரத்திற்க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
ஜனாஸா அடக்கம் முடிந்தயுடன் இரக்கல் கூட்டம் நடந்தது. இதில் தமுமுக மாநிலசெயலாளர் கோவை உம்மர் அவர்கள் தலைமையில் நடந்து. பிறகு இதில் தி மு க தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னாள் சட்ட மன்ற கொரடா ப மு முபராக், ஊட்டி அதிமுக நகர செயலாளர்,தேமுதிக செயலாளர்,காங்கிரஸ் நகர தலைவர்,ஊட்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பலர் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இறுதியில் மனித நேய மக்கள் கட்சி மாநில துனைச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தினர் இதில்'அவர் மரணம் அடைந்தா 6 பேர்க்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார். அப்போது அருகில் இருந்த ப மு முபரக் நான் உடனடியாக அரசுக்கும், தமிழக முதல்வர்க்கும் பேக்ஸ் கொடுத்து நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார்.
இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு ஊட்டி மார்கட் பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.
இந்த துயார சம்பவத்தை கேட்ட கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தமுமுக, மமக, நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலானோர் ஊட்டியில் குவிந்தனர்.
ஊட்டியே சேகத்தில் திகழ்ந்தது.
மரணம் அடைந்த 6 நபர்களின் குடும்ப விபரம் 1,ஷேக் அப்துல்லாவுக்கு மனைவி, ஒரு ஆண் ஒரு பெண் குழைந்தைகள். 2, யூனுஸ்க்கு மனைவி, இரண்டு குழைந்தைகள். 3,மதீன்க்கு மனைவி, முன்று ஆண் குழைந்தைகள், ஒரு பெண் குழைந்தைகள். 4, சைபுதீன்க்கு மனைவியும்,இரண்டு குழைந்தைகள். 5,சாதிக்க்கு மனைவியும், இரண்டு பெண் குழைந்தைகள். 6, எஹ்ஸான்க்கு திருமணம் ஆகவி்ல்லை.
இவர்களின் கப்ர் வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும், துஆ செய்யுங்கள், இவர்களின் குடும்பங்களின் ஏற்பட்ட சோதனையில் முழ்கியுள்ள இவர்களுக்கும் துஆ செய்யுங்கள்.

ஊட்டியில் இருந்து செய்திகள் புகைப்படம் : கோவை தங்கப்பா


முதல் படம்தான் மனித நேய மக்கள் ஊட்டி மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா












































































































































































































































































































Friday, April 30, 2010

Monday, March 29, 2010


முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிஷனை பற்றிய கலந்தாய்வு கூட்டம்
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக மிஸ்ரா கமிஷன் பற்றிய கலந்தாய்வு கூட்டம் 28-03-2010 அன்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் உள்ள ஹோட்டல் பிரஸிடெண்டில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பல முஸ்லிம் இயக்கங்களும் மற்றும் சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் முக்கிய உரையாற்றி ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்கள்.





















































































































































































































































































Sunday, March 7, 2010

மதுவிலக்கு அமலாக்க கோரி
கோவையில் ம.ம.க. போராட்டம்
இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்
கோவை,மார்ச.7-
கோவையில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடையில் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீசார் காயம் மடைந்தனர்.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்திருந்தது.

கோவையில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடத்தில் டாஸ்மாக் கடைகளில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு த.மு.மு.க மாநில செயலாளர் கோவை உமர், தலைமை தாங்கினர் இதில் ம.ம.க மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாநகர செயலாளர் ரபிக், மற்றும் தமுமுக, மமக, மாவட்ட நிர்வாகிகள் அகமது கபீர், ஜபார்சாதிக், ஜாகீர், மைதீன் சேட், கவிஞர் ஹக், ஹக்கிம்,மற்றும் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்தில் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடையை தாண்டிச்செல்ல முயன்றனர், அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதில் உதவி போலீஸ் கமிஷனர் குமாரசாமி கீழே விழுந்தார்.

இந்த சமயத்தில் யாரோ சிலர் டாஸ்மாக் கடை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பெண் போலீஸ் கற்பகவள்ளி உள்பட 1பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது,

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்,இதே போல் குனியமுத்தூரில் 87 பேரும், சுந்தராபுரத்தில் 68 பேரும், கைது செய்யப்பட்டனர்.

மறியலை தொடர்ந்து துனை கமிஷனர் நாகராஜ், தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்து மாநில செயலாளர் கோவை உமர்யிடம் சம்பவத்தை பற்றி விசாரித்தார்.

செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா